Sunday, August 16, 2015

கடன்




'டேய் மச்சி.. தயவு செஞ்சு நான் சொல்றத நம்பு. இந்த ஒரு வாரமா எனக்கு கெடைக்கற அப்ரிசியசன்ஸ் எல்லாமே நான் பண்ணது கெடயாது டா.' என்று சீரியஸ்ஆ கார்த்திக் மோகனிடம் சொல்லிகொண்டிருந்தான்.
'ஹ்ம்ம். அப்பறம்? இவருக்கு வேற யாரு வந்து ஹெல்ப் பண்றாங்க? எதாச்சும் பேய் வந்து ப்ரோக்ராம் எழுதுதா? இருந்தாலும் இருக்கும்.. இப்படி நைட் ஷிப்ட்ல, தனியா வொர்க் பண்ணா அப்படிதான்.' என்றான் சிரித்தபடி.
மோகன், கார்த்திக்.. இரண்டு பெரும் ஒரு கல்லூரியில் படித்து, ஒரே கம்பெனில  வொர்க் பண்றாங்க.மோகன், டைடல் பார்க்கில் உள்ள ஒரு பிரிவில் வேலை. கடந்த வருடம் வரை அதே கம்பனில், பெங்களூரில் அமைந்துள்ள  வேறு  பிரிவில் வேலை பார்த்துகொண்டிருந்தான் கார்த்திக். இந்த 6 மாத காலமாய் இருவரும் ஒரே பிரிவில், டைடல் பார்க்கில் , வேறு வேறு ப்ராஜெக்ட்ல் வேலை செய்கிறார்கள்.   இருவரில் மோகன் சுமாரான ப்ரோக்ராம் பண்ன கூடியவன். கார்த்திக் .. கொஞ்சம் புத்திசாலி தான்.


மோகன் வெந்தும் வேகாமலும் இருந்த தோசையை சாப்பிட்டபடி.
 'டேய்..  நைட் ஷிபிட் நான் என்னமோ கேட்டு வாங்குன மாதிரி சொல்ற. நானே செம காண்டுல இருக்கேன் ஆறு மாசமா.  நானே ஜாவால எதுவுமே தெரியாதவன். ஏதோ கொஞ்ச நஞ்சம் தெரிஞ்சத வச்சு, ஒரு டிபெக்ட்ஆ பிக்ஸ் பண்ன தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும். வேற ப்ராஜெக்ட்ல இருந்தாலும்,  ஏதோ நீ இருந்ததல அப்படியே சமாளிக்க முடுஞ்சுது. நீயும் மெடிக்கல் லீவ்ல போயிட்டே.  ஆனா, கடந்த ஒரு வாரத்துல எல்லா இஸ்யுசும் காத்து மாதிரி ரிசால்வ் ஆகுதே எப்படி? நானும் சின்ன சின்ன சேஞ்ச் தான்னு கண்டுக்காம தான் இருந்தேன். ஆனா.. இப்ப இந்த ரெண்டு நாளா மேனேஜர் கொடுக்கற டிபெக்ட், ரொம்ப கிரிடிகல் அண்ட் பிக்ஸ் பண்ன என்னால கண்டிப்பா முடியாது. அதுவும் நேத்து ஒன்னு பிக்ஸ் ஆகிருக்கு. கோடு சேஞ்ச்ம் ஆகிருக்கு. அதுக்கு தான் உன்ன தூங்காம இருக்க சொன்னேன். இன்னிக்கு இதை பிக்ஸ் பண்ணியே ஆகவேண்டும். ஏதோ ரெண்டு வாரமா எப்படியோ பிக்ஸ் ஆகிடுச்சு. ஆனா, இன்னிக்கு கொஞ்சம் பயமா இருக்கு டா.  ஆரம்பித்திலேயே சொன்னா.. நீ நம்ப மாட்ட. அதான் சொல்லல. நீ தான் ஹெல்ப் பண்ணனும் டா. இப்ப என்ன பண்ணலாம்? ' என்று மோகனை பார்த்து கேட்டான்.
'சரி.. நீ கேக்கற கேள்வி எல்லாம் ஞாயம் தான். இது யாரோ உன்ன பயமுறுத்த பண்ற வேலை இது. உன் பாஸ்வோர்ட் உன்ன தவிர வேற யாருக்காச்சும் தெரியுமா? இல்ல ஆன்சைட்ல இருக்கறவங்க யாராச்சும் ரிமோட்ஆ வொர்க் பன்றன்களோ?' என்று தன்னுடைய சிபிஐ வேலையை ஆரம்பித்தான் கார்த்திக்.

'டேய். என்னோட பாஸ்வோர்ட் உனக்கு தெரியும். வேற யாருக்கும் தெரியாது. கண்டிப்பா ஆன்சைட்ல இருக்கறவங்க இத பண்ணிருக்க மாட்டாங்க. எப்படா பொழுது போகும், எப்படா டாஸ்க் எல்லாம் ஆப்ஷோர்கு அனுப்பலாம்னு வெயிட் பண்ற குரூப். இது ஏதோ அமானுஷ்ய வேலை மாதிரி தெரியுதுடா.' என்று கொஞ்சம் பயந்தபடி கூறினான் மோகன்.

   'இன்னிக்குதான் நானும் உன்கூட இருக்கேன்ல. ஹாலுக்கு வர்றதுக்கு முன்னாடி சிஸ்டம் லாக் பண்ணிட்டு தானே வந்தோம். பாக்கலாம். ப்ரோக்ராம் யார் இப்ப பிக்ஸ்  பண்றாங்கன்னு  பாத்துடலாம்.' என்றவாறு, சாப்பிட்ட தட்டை எடுத்துவிட்டு, கை கழுவ சென்றான் கார்த்திக்.
இருவரும் ரூமை நோக்கி போக, அங்கே, மோகனின் லாப்டாப் தானாக உயிர்ப்பித்து, அதில் ஜாவா கோடும் அடிக்கபட்டு இருந்தது. கார்த்திக் வேகமாக சென்று மொனிடர்ஐ பார்க்க, கிரிடிகல் டிபேக்ட் பிக்ஸ் ஆகி இருந்தது.  கார்த்திக் அதை சரி பார்த்தான்.
'டேய். எச்செல்லேன்ட் டா. சூப்பர்அ ரிசல்வ் ஆகிருக்கு. நீ சொன்ன மாதிரி ஏதோ அமானுஷ்யம் தான்னு நெனைக்கறேன். அப்படியே இருந்தாலும், உனக்கு நல்லது தானே நடக்குது. விட்டுவிடு. இது எவ்வளவு தூரம் போகுதுன்னு பாக்கலாம்.' என்றான் கார்த்திக்.
மோகன்,'இல்லடா. இதுல இன்னொரு பிரச்னையும் இருக்கு.' என்றான்.
'என்னடா சொல்ற?' என்றான் கார்த்திக்.
'ஆமா. கடந்த ரெண்டு வாரமா, இந்த ஹெல்ப் கெடைக்கறதுக்கு முன்னாடி, டே டைம்ல ஆபீஸ் போய், நான் நம்ம டீம்ல இருக்கற 3 பேர் கிட்ட ஹெல்ப் கேட்டேன். ராஜி, ஸ்ரீகாந்த், பார்த்தி. இவங்க மூணு பேருமே இப்ப அச்சிடேன்ட் ஆகி வீட்டுல இருக்காங்க.'

'சரி. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.?' என்றான் கார்த்திக்.

' அதுக்கு காரணம் இருக்கு. முதல் தடவை, ஒரு  வாரம், நான் ராஜி கிட்ட ஹெல்ப் கேட்டப்போ, எவனிங் அவங்க கெளம்பற நேரம். அப்போ தான் நா ஆபீஸ்கு வந்து ஒரு மணி நேரம் இருக்கும். அவங்க எனக்கு அந்த ப்ரொப்லெம் எப்படி பண்ணனும்னு சொல்லி கொடுத்தாங்க. அப்போ நீ லீவ் போட்டுட்டு ஊருக்கு கெளம்பிட்டு இருந்த. கரெக்ட் அஹ?' என்றான் மோகன்.

கார்த்திக்,'ஆமாம். ஞாபகம் இருக்கு'

'ஹ்ம்ம். எனக்கு அதை ரிசல்வ் பண்ணிட்டு, அவங்க கெளம்பி, OMR ரோடு போனவுடனே, அச்சிடேன்ட் ஆகிருச்சு அவங்களுக்கு.'

'சரி. அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே?'

'எனக்கு அப்போ ஒன்னும் தோணல. அவங்க சின்ன அடியோட தப்பிசுட்டங்க. அப்பறமா, ரெண்டு நாள் கழிச்சு ஒரு ப்ரொப்லெம்காக ஸ்ரீகாந்த் கிட்ட டவுட் கேட்டேன். அப்போ லஞ்ச் டைம். அவரு அவசரமா கெளம்பிட்டு இருந்தார். ஆனாலும், எனக்கு அதை ரிசல்வ் பண்ணிகொடுதுட்டு தான் போனாரு. ஆனா, அதே எடத்துல, அவரும் அச்சிடேன்ட் ஆகிட்டாரு.'

'டேய். நீ பயத்துல, ஏதேதோ போட்டு கற்பனை பண்ணிட்டு இருக்காத. டைடல் சிக்னல் கொஞ்சம் டிராபிக் ஜாஸ்தி. ராஜிக்கு ஒழுங்கா சைக்கிள்அஹ ஓட்ட தெரியாது. அது ஸ்கூட்டில போய் விழுந்திருக்கு. அதுவும் மொக்க அடிதான். ஸ்ரீகாந்த், அவன் எப்போமே வேகமா பைக் ஒட்டுவான். அதுவும் புது பைக்வேற. அதுவும் அவன் பசில லஞ்ச்கு போறப்போ அவன ஸ்டாப் பண்ணி டவுட் கேட்டுருக்க. டைம் ஆனதால, வேகமா போயிருப்பான். சோ, அதுவும் எதச்சைய நடந்தது தான்.'

'அப்போ. பார்த்தி? அவன் கிட்ட வண்டியே கெடயாது. அவனுக்கும் ஏன் அச்சிடேன்ட். அதே எடத்துல நடக்கணும். அவன்கிட்டயும் கடைசியா பேசினது, ஹெல்ப் கேட்டது நான் தான். அவனுக்கும் ஏன் அதே மாதிரி அச்சிடேன்ட் ஆகனும்? இப்ப பாரு, டீம்ல முக்கால் வாசி பேர் ஹோச்பிடல்ல. இதுக்கு எல்லாம் மேல, சில சமயங்கள்ல, என்னால திடீர்நு ஒரு விதமான வித்தியாசமா உணர்றேன்.  எனக்கென்னமோ, இது ஆவி சம்பந்தபட்டதா இருக்கலாம்னு தோணுது. ' என்றான் மோகன் பயந்துகொண்டே.

யோசனையில் விழுந்தான் கார்த்திக். கார்த்திக்கு பேய், பூதம் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்த போதிலும், நடக்கும் விசயங்களும் சாதரணமாக தோன்றவில்லை.
'டேய் மோகன். உனக்கு ரகு ஞாபகம் இருக்கா?'
'ஆமா. கரெக்ட் டா. அவன் கிட்ட கேட்டு பார்த்த எதாவது விஷயம் தெரியலாம். அவன் நம்பர் இருக்கா?' என்றான் மோகன்.

'இருக்கு. அவன் தான் எப்ப பாரு இந்த மாதிரி அமானுஷ்ய விசயங்களை பத்தி அடிக்கடி பேஸ்புக்ல அப்டேட் பண்ணுவனே? அவன்கிட்ட கேட்ட எதாச்சும் தெரியலாம்.' என்று சொல்லிக்கொண்டே தனது போன்ஐ எடுத்து, ரகுவிற்கு கால் செய்தான்.
"தி நம்பர் யு ஹவெ.." என்று பதில் வர, கார்த்திக், 'நம்பர் நாட் இன் யூஸ் டா' என்றான்.
'ஒரு நிமிஷம். பேஸ்புக்ல பிங்க் பண்ணி பாக்கறேன்.' என்றவன், உடனடியாக ஒரு மெசேஜ்ஐ தட்டி விட்டான்.  அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ரகு நம்பர் கிடைக்க, போன் செய்தான் கார்த்திக்.
'ஹலோ'
'ஹே ரகு, எப்படி இருக்கடா?'
'ஐ'ம் பைன். சொல்லுடா. என்ன மேட்டர்?'
'ஒன்னும் இல்ல. மோகன் இருக்கான்ல? அவனுக்கு ஒரு ப்ரொப்லெம். இப்போ எங்க இருக்க?'
.........
'ஓகே டா. இப்போ டைம் ஆச்சு. பரவா இல்லையா?'
.......
'சரி. ஓகே. அப்போ டைரக்ட்அஹ நாங்க அங்கேயே வந்துடறோம். ஓகே சி யு.' போன்ஐ கட் செய்தவன், 'மோகன்., ரகு ரூம்ல தான் இருக்கானாம். அவன்கிட்ட பைக் இல்லையாம். சர்வீஸ்கு விட்ருக்கனாம். வரசொன்னான் இப்போ. போலாமா?'
'டேய். நைட்ஷிபிட் வேறடா. ஆன்சைட்ல கேக்கறேன். எதுவும் ப்ரொப்லெம் இல்லைனா, போலாம்டா.'
'சரி. நீ கேட்டுட்டு சொல்லு, நான் வெயிட் பண்றேன்.' என்ற கார்த்திக், சேர்ரில் உட்கார்ந்தான்.
பேசி முடித்த பின், சோர்வாக திரும்பினான் மோகன்.
கார்த்திக்,' என்ன.. அஸ் யூஸ்வல், முடியாதா?'
ஆமாம் என தலையாட்டினான் மோகன்.
'சரி விடு. நா ரகு கிட்ட சொல்லிடறேன். நாளைக்கு சனிகிழமை தான.  நம்ம நாளைக்கு போய்க்கலாம். அவனும் ப்ரீஐ இருப்பான்.'

ரகுவை சந்தித்து, நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் மோகன். மிக கவனமாக கேட்டவன், 'மோகன். இது கண்டிப்பா ஆவி சம்பந்த பட்ட விஷயம் தான். நைட், கார்த்தி கொஞ்சம் போன்ல சொன்னான்.  எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார். அவர் பேய்களை பத்தி நிறைய ரேசீர்ச் பண்ணிட்டு இருக்கார். நா அவர்கிட்ட நேத்து நைட் பேசிட்டு, அப்பொஇண்ட்மெண்ட் வாங்கிருக்கேன். எவனிங் போலாமா?' என்றான் ரகு.

'என்னடா ரகு.. இவங்களைய பார்க்க வந்தோம்?' - மோகன்.
'ஆமா. இவங்க தான் நா சொன்ன 'தெரிஞ்சவர்'.   -ரகு
 'உனக்கு தெரிஞ்சவர்னு சொன்னே, இங்கவந்து பார்த்தா, ஒரு பொண்ணு. இவங்களா நமக்கு?' என்று இழுத்தான் மோகன்.
'ஆமா டா. இவங்க பேர் சாருமதி டேவிட். சொந்த ஊரு மறையூர், கேரளா . ஆனா, முனார், தமிழ்நாடு பார்டர்ன்றதால, இவங்க தமிழும் பேசுவாங்க.  இவங்க ஹோஸ்ட் ரிசர்ச்ல நெறைய புக்ஸ், ப்ளொக்ஸ் எல்லாம் எழுதிருக்காங்க. அது மட்டும் இல்ல. இவங்க பேய் இருக்குன்றத முழுசா நம்பறாங்க. இவங்க நெறைய  கேசெஸ் சால்வ் பண்ணிருக்காங்க.' -ரகு.
ரகு சாருமதியை பற்றி சொல்லிகொண்டிருக்க,
'ஆர் யு ரகு? உங்களை மேடம் வரசொல்றாங்க.' என்றான் அங்கு இருந்த ஒரு உதவியாளர்.

உள்ளே சென்ற மூவரும், ஒரு பெரிய ரூம் வரவேற்றது. சுற்றிலும் மிக அமைதியான சூழ்நிலை நிலவ,  நாற்பது வயதுமிக்க ஒரு பெண் அமர்ந்திருக்க, இவர்களை பார்த்து, எதிரில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறினாள். 'சொல்லுங்க ரகு. இவங்க தான் நீங்க சொன்ன பிரண்ட்ஸ் அஹ?' என்றவாறு மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டாள். கார்த்திக் அந்த அறையை நோட்டமிட்டான். எந்த விதமான கடவுள்களின் படமோ, மத சம்பந்தமான சம்பரதயங்கலோ, எதுவும் இல்லாமல், துடைத்து வைத்த மாதிரி இருந்தது அந்த அறை. ஒரு மெலிதான இசை அந்த அறையில் இருந்த ஸ்பீக்கர்ரில் கசிந்து கொண்டிருந்தது. இதற்கு இடையில், மோகன் நடந்த விசயங்களை விலாவரியாக விவரிதுக்கொண்டிருந்தான்.
கவனமாக கேட்ட சாருமதி, "நீங்க சொல்லுவதை எல்லாம் வைத்தும், எனது அனுபவத்தையும் வைத்தும் பார்க்கும்பொழுது, இது பாவலோக ஆவிகளின் வேலையாக இருக்கலாம். கொஞ்சம் டீடைல்அஹ சொல்றேன்.
என்னோட அனுபவத்தையும், ஆராச்சியையும் வைத்து, ஆவிகளை மூன்று விதமாக பிரிக்கலாம். உலகத்துல இருக்கிற எல்லோருமே மரணத்துக்கு அப்புறம் ஆவிகள் உலகத்துக்கு தான் போறாங்க. அந்த ஆவிகள் உலகத்துல பாவலோக ஆவிகள், மத்தியலோக ஆவிகள், புண்ணியலோக ஆவிகள்னு மூணு விதமான பிரிவுகள் இருக்கு. உயிரோட இருக்கும்போது மனிதன் எப்படி வாழ்கிறானோ அதுக்குத் தகுந்தபடி, அவர்களுடைய மரணத்துக்கு அப்புறம் இந்த மூணு உலகத்துல ஓர் உலகத்துக்குப் போவாங்க. மத்தியலோக ஆவிகள் நல்லதும் பண்ணாது, கெட்டதும் பண்ணாது. புண்ணியலோக ஆவிகள் மனிதர்களோட சகஜமா பேசவும் பழகவும் செய்யும். நம்மளைத் தொந்தரவு பண்றதெல் லாமே பாவலோக ஆவிகள் மட்டும்தான். தவிர, நம்ம நாட்டுல இருக்கிற மாதிரி ஆவிகள் உலகத்திலேயும் சட்ட திட்டங்கள் இருக்கு. இதெல்லாம் ஆவிகள் உலகத்துல நான் பயணப்பட்டு தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள். புண்ணிய லோகத்துல இருக்கிற ஆவிகள் மனிதனுக்கு ஏதாவது உதவிகள் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படும். 'கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் நான் செத்திருப் பேன்டா’னு யாராவது சொல்லியிருப்பாங்க. இதெல்லாம் புண்ணியலோக ஆவிகளோட செயல்தான். பாவலோக ஆவிகள் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நீங்களே பலவிதமாக, சினிமா, கதைகள்ல பாத்திருப்பீங்க, படிச்சிருப்பீங்க.  இப்படி சக மனிதனுக்கு உதவணும்னு நினைக்கிற புண்ணியலோக ஆவிகளை வெச்சு என்கிட்ட வர்றவங்களோட பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன். தவிர, எல்லா ஆவிகள்கிட்டேயும் நல்லா பேசி, பழகி என்னோட ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்திக் குவேன். ஆனா உங்க விசயத்தில ஒரு சில விஷயங்கள் நெருடல இருக்கு. உங்களுக்கு உதவி செயுதுனும் சொல்றீங்க, அதே சமயம் உங்க குரூப்ல இருக்கற சில பேருக்கு அச்சிடென்ட்அகிருக்குனும் சொல்றீங்க. அதுவும் இல்லாம, உங்க கிட்ட சில கேள்விகள் கேக்கணும்.
உங்களுக்கு தெரிஞ்சவங்க, பழகினவங்க யாரவது சமீப காலமாகவோ, யாரவது இறந்திருக்கங்கள? துர்மரணம் எதாவது?" என்ற கேள்வியுடன் தனது பேச்சை நிறுத்தினாள் சாருமதி.
இது வரை அமைதியாய் இருந்த மோகனின் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது.
கார்த்திக், 'ஆமாங்க. ரெண்டு வருஷமா, மோகனுடன், என்னுடன் மிகவும் க்ளோஸ்அஹ இருந்த எங்க ப்ரண்ட், பிரியா. ரொம்ப நல்ல ப்ரில்லியன்ட்.  ஒருவருடத்திற்கு முன்னால கடன் தொல்ல தாங்க முடியாம சூசைட் பண்ணி இறந்துட்டாங்க.' அவங்க எனக்கும் மோகனுக்கும் நெருக்கமான தோழி.' என்றான் கார்த்திக்.
'ஒருவேளை, அவங்க ஆவி..' என்று இழுத்தாள் மோகனை பார்த்தபடி.
 'இருக்காதுங்க சாருமதி. அவ ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியானவ. எந்த பிரச்சனையா இருந்தாலும் தனக்குள்ள வச்சுகிரவ. தன்னல மட்டுமே தன் ப்ராபலாத சால்வ் பண்ண முடியும்னு நம்பற பொண்ணு. அவ ஏன் இப்படி பண்ணனும்? இருக்காதுங்க.'
சாருமதி, 'நா அவங்களை தப்பனவங்கனுநும் சொல்லல, உங்க பிரண்ட்ஸ்அஹ அச்சிடென்ட் பண்ண காரணமா இருக்கான்ங்கநும் சொல்லல.  அட் தி சேம்டைம், உங்களுக்கு உதவியா இருந்திருக்கு. அது ஏன் பிரியா வா இருக்க கூடாது?'
மோகன் அமைதியானான்.
' சரி. அவங்க கூட பேச முடியுமான்னு பாக்கறேன். நீங்க அவங்க டீடைல் கொடுத்துட்டு, வெளில வெயிட் பண்ணுங்க. நா கூப்றேன்.' என்றாள் சாருமதி.
ஒரு மணிநேர காத்திருப்புக்கு பிறகு, சாருமதி மூவரையும் உள்ளே அழைத்தாள்.
'ஐ'ம் சாரி மோகன். நா எவ்வளவு முயற்சி செய்தும், அவங்க கூட பேச முடியவில்லை.  ஒருவேளை அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம். பட், பேசி பாக்கறது தப்பில்லை.'
'வேற வழியே இல்ல சாருமதி?' - மோகன்
'ம். அஸ் ஐ செட், இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. உங்கள் அறையில் இருந்து தான் முயற்சி செய்ய வேண்டும்.  இந்த ஸ்படிக மாலையை போட்டுக்கோங்க. கூடவே இந்த முக கண்ணாடியையும். நீங்கள் அமரும் இடத்திற்கு அருகில் வச்சுக்கோங்க.  ஒரு சின்ன விஷயம். இந்த மாலையும், கண்ணாடியும் பரிசுத்தமான ஒன்று. கொஞ்சம் அசைவம்  சாப்படகூடாது. உங்களுக்கு உதவி செய்யறது ஆவிதானணு கன்பர்ம் பண்ணனும். ஒருவேளை, அது பிரியாவாக இருக்கும் பட்சத்தில்,  பிரியா எப்போ உங்க கூட இருப்பதை உணர்கிறீர்களோ, அப்போ, கொஞ்சமும் பயப்படாமல், உங்க மனசை ஒருநிலை படுத்தி, அவங்களை மட்டும் நினைவில் வைங்க. நான் கொடுத்த மாலையும் முக கண்ணாடியும் அதற்கு உதவியாக இருக்கும். அவங்க பேச விருப்பபட்டு, அதே மீடியம், அதாவது, உங்களுடைய லேப்டாப் மூலமா  பேசினா, உங்க கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.  அதுக்கு பிறகு, அந்த ஆவியை நம்ம கட்டுபடுத்த வேண்டும். இது கொஞ்சம் கவனமா செய்யணும். கண்டிப்பாக நானும் உங்களுடன் இருப்பேன்.  அவங்க உங்க கூட பேசும் பொழுது, அவர்களுக்கு பிடிக்காத ஒன்றையோ, விருப்ப படாத ஒன்றையோ, கேட்க வேண்ட. ஒருவேளை அது ப்ரியாவின் ஆவியாக இல்லாத பட்சத்தில், மேற்கொண்டு பேச முற்படும் பொழுது, எதாவது அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு.
நாளை கழித்து மறுநாள் இதை செய்வோம்.

இரண்டு நாட்களும் மோகனுக்கு ப்ரியாவின் நினைவுகள், ப்ரியாவை சுற்றியே இருந்தது. திங்கள் இரவு, மோகன் எப்பொழுதும் போல ரூமில் அமர்ந்து  தனியாக வேலை செய்து கொண்டிருக்க, சருமதியும், அவரது உதவியாளரும், கார்த்திக்கும்  ஹாலில் இருந்தனர். மோகன் மனதில் ப்ரியவவாக இருக்குமோ என்று எண்ணினாலும், அவளாக இருக்க கூடாது என்றும் எண்ணம் தோன்றியது. அவளின் ஆத்மா சந்தியடைந்திருக்க வேண்டுமென்றே விரும்பினான்.  எவ்வளவு துணிச்சலான பொண்ணு. சிறுவயதில் அப்பாவை இழந்தாலும், அவர்களது பரம்பரை சொத்து நிறைய இருக்க, அவளால் சுலபமாக படிக்க முடிந்தது. படித்து முடிக்கும் போதே அம்மாவும் போய்விட, ஒரே உறவாக உடன் பிறந்தவன், இருந்தவன், ஆனந்த். ட்வின் பிரதர்கு கான்சர்ன்றப்போ, எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா?  கான்சரில் பதிக்கப்பட்ட அவனது தம்பியை காப்பாற்ற, எவ்வளவு போராடினாள்? ஆனந்த் படிக்கவில்லை. அம்மா போன பின்பு, +2 வரையே படித்திருந்த ஆனந்த், பரம்பரை சொத்தை காப்பாற்ற போய்விட்டான், . கான்சர் கன்பர்ம் ஆனதில் இருந்து, ஆனந்த் யாரிடத்திலும் பேசுவதே இல்லை. அதுவும், கடைசி கட்டத்திலே தெரியவந்ததால், ரூமை விட்டு வரவே மாட்டான். இவ்வளவு கஷ்டத்திலும்,  எந்த ஒரு கஷ்டத்தையும் ஒரு நாள் கூட யாரிடத்திலும் சொல்லிகேட்டதில்லை. எப்போதும் சிரிச்ச முகமாய் இருப்பாள். வாழ்ந்து கெட்ட குடும்பம். கௌரவம், அது இதுனு,  இப்படி எதையும் வெளியில் சொள்ளததாலே, தெரியாமல் போனது அவளது பிரச்சனைகள். அந்த இழப்பிற்கு முந்தைய நாள் நன்றாகவே நினைவிருந்தது.


'என்னம்மா பிரியா, வாங்குன குடுக்கிற ஐடியா இருக்கிறதா, இல்லையா. வாங்கின கடனுக்கு, ஒன்னு பணத்தை பேங்க்ல கட்டு. இல்லையா, சொத்து எல்லாத்தையும் வித்து கட்டுங்க. போதுமான டைம் கொடுத்தாச்சு. இதுக்கும் மேல என்னால முடியாது. பாங்க்ல லோன் வாங்கி தர்றது மட்டும் என் வேல இல்ல. உங்களமாதிரி ஏமாத்துற ஆளுக கிட்ட இருந்து, பணம் திரும்ப வாங்கறதும் என் வேலைதான்.  என்ன பண்றது. உங்க அண்ணன், நல்ல இருந்திருந்தா, அவன் சட்டைய பிடிச்சு கேக்கலாம்., அவன் ஆயிசு முடுஞ்சது, அவனும் போய்ட்டான். பரவாஇல்ல. வுடு. சொத்து இருக்கு, பத்தலையா நீயும் அழகாதான் இருக்க.  @#$%' ஏகத்துக்கும் அவன் பேச, மிகுந்த அவமானம் ஆகிவிட்டது. நானும் அப்போது தான் அங்கு வந்து சேர, கோவத்தில் அவனிடத்தில் ஏகத்திற்கும் பேச, அவன் ஏகமாக பேச ஆரம்பித்தான். எனது கோபம் தலைக்கு ஏறி, ராகேஷ்ஐ ஓங்கி அறைந்து விட்டேன். பெரிய கைகலப்பாக, போலீஸ் வந்தது. ஒரு வழியாக போலீஸ் இடம் விளக்கி, ராகேஷ் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தோம்.  போலீஸ்ம் கட்ட பஞ்சாயத்து பண்ணியது போல, இரண்டு மாதம் காலஅவகாசம் வாங்கி தந்தார்கள். அப்பொழுது கார்த்திக் பெங்களூரில் இருந்ததால், இதை பற்றி போனில் அவனிடம் பேசினேன். அவனும் நானும் பிரியாவிற்கு உதவி செய்வதாக முடிவு செய்து, நாங்களும் கடன் வாங்க முடிவு செய்தோம். கார்த்திக் ஊரில் இருப்பதால், அவன் வந்தவுடன் பணத்தை திரட்டி, கடனை முடிப்பதை இருந்தோம்.  அன்று இரவு, ப்ரியாவை தனியாக விட்டது என்னுடைய தவறு தான். 12 மணி வரைக்கும் மெசேஜ் அனுப்பி கொண்டு தான் இருந்தாள். நானும் தூங்கி விட்டாள் என விட்டு விட,  எனக்கும், போலீஸ்கும் ஈ-மெயில் அனுப்பிவிட்டு, கையை அறுத்து கொண்டாள். அடுத்தநாள் அவளை ரத்த வெள்ளத்தில்,லேப்டாப்உடன் தான் பார்த்தேன்.  சரியாக மணிக்கட்டில் இருக்கும் நாடி நரம்பில் அறுபட்டு, ரத்தம் வெளியேறி இறந்திருந்தாள்.

இப்போது நினைத்தாலும் மோகனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. திடீரென, அவனை சுற்றிலும் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தான். கொஞ்சம். இல்லை, நிறையவே பயப்பட, சாருமதி சொன்னது ஞாபகத்தில் வந்தது. பயத்தை கொஞ்சம் தைரியமாக மாற்ற முயற்சி செய்தான். மனதை ஒருநிலை படுத்த முயற்சி செய்தான், அவனது சிஸ்டம் ஆட்டோமாடிக்அஹ அவனது சாப்ட்வேர்  ஓபன் ஆக, அதில் தானாக டைப் ஆக ஆரம்பித்தது.
 மெலிதான குரலில், நடுங்கியபடி, 'பிரியா' என்றான். மோகனுக்கு வேர்க்க ஆரம்பித்திருந்தது. ஆனால், சாப்ட்வேர்ரில் டைப் ஆவது நிற்க வில்லை.
மீண்டும் சற்று அழுத்தமாய், 'பிரியா' என்றான். டைப் ஆவது இப்போது நின்று இருந்தது. notepad ஓபன் ஆக, 'சொல்லு மோகன்' என்று டைப் ஆனது.
மோகனின் உடல் முழுவதும் சிலிர்க்க, அவனது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. 'ப்ரி... ப்ரியா.' என்று குழறியது.
'மோகன். ப்ரியா தான். எப்படி இருக்க?' என டைப் ஆகியது.
'மோகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
'ஏன் பிரியா இப்படி பண்ண. என்ன விட்டு போக எப்படி துணிஞ்ச? ஏன், நா எல்லாம் இல்ல? உன்ன விட்ருவோமா?' என அழுது கொண்டே கேட்கலானான்.
நோட்பேட் டைப் ஆக ஆக, மோகன் அதை படித்தான்.

நா பண்ண மிகபெரிய தப்பு தான் மோகன், தம்பி ஆபரேஷன்கு பணம் லோன் வாங்கினதுதான். அதுவும், உங்க ரெண்டுபேருக்கும் தெரியாம வாங்கினது தான். என் கஷ்டம், என்னோட போகட்டும்னு தான் சொல்லல, மூணு பேருமே கஷ்டத்துல இருந்த டைம். உனக்கும், கார்த்திக்கும் எடுகேசன் லோன் இருந்ததல தான் சொல்லல.  அந்த ஆபரேஷன்கு அப்புறம், இருந்த ஒரே சொந்தம், ஆனந்த்ம் என்கூட இல்ல, நிம்மதியும் இல்ல. வாங்கின 5 லட்சத்துக்கு, வர சம்பளத்துல, எல்லாமே கடனுக்கு போய்டுச்சு.
பேங்க்ல இருந்து ராகேஷ் வேற என்ன டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டான். வீட்டுக்கு வந்து, ஆள் வச்சு மெரட்டினான். தம்பிய இழந்த சோகம், ராகேஷ் பண்ணிய அவமானம், ஆபீஸ்ல வொர்க் பிரஷர்நு, என்னால தாங்க முடியாத அளவுக்கு போய்டுச்சு. உங்கள மாதிரி, பிரச்சனைய வெளில சொல்ல எனக்கு தெரியல. அது ஒரு கட்டத்துல, என்ன தற்கொலைக்கு கொண்டு போய் விட்டுடுச்சு."

"நான் வேற யாரோவென மிகவும் பயந்து போய் இருந்தேன். பிரியா, எனக்கு உதவி செய்வது நீதானே?,"
"ஆம்" என டைப் ஆனது.
"அப்போ, எனக்கு உதவி செய்யும் நீ, கூட இருக்கறவங்கள ஏன் அச்சிடென்ட் பண்ணனும்? அவங்கள ஏன் அச்சிடென்ட் பண்ணனும்?" கேட்டான். பிரியா பேச ஆரம்பிக்கும் முன்பு, போன் ரின்கானது.  "ஆன்சைட்" கால். ரிசீவர்ஐ எடுத்து, பேசினான். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, விளக்கம் கொடுத்தவன், ரிசீவர்அஹ வைக்க போனவன், ரிசீவர் ஒயரில் சுத்தி இருந்த சாருமதி கொடுத்த முக கண்ணாடி, மேஜையில் இருந்து தவறி, சரியாக அங்கு இருந்த டைல்ஸ்ல் பட்டு உடைந்தது.
பதட்டமான மோகன், மீண்டும் மனதை ஒருநிலைபடுத்தி ப்ரியாவுடன் பேச முயற்சி செய்தான். பயனற்று போக, சாருமதி உள்ளே அந்த அறையினில் நுழைந்தாள்.  சாருமதி கடிந்து கொண்டாள், அவ்வளவு தூரம் சொல்லியும் இப்படி கவன குறைவா இருந்திருக்கிங்க? இப்போ அவங்களிடத்தில் உங்களால் பேச முடியாது என்று கூறியவள், உடனே அந்த உடைந்த கண்ணாடியை எடுக்க உதவியாளரிடம் கூற, அவனும் உடைந்த கண்ணாடி சில்கலை சேகரித்து, கருப்பு பையில் போட்டு கொண்டாள். பிரியா இப்பொழுது கட்டுப்பட்டு விட்டாள். மேற்கொண்டு அவளிடம் பேசி பார்க்க வேண்டும். இனிமேல் அவளிடம் இருந்து எந்தவிதமான பிரச்னையும் வராது. பேசி விட்டு, பிறகு சொல்கிறேன் என்று சொல்ல, இதை இப்போதே தெரிந்து கொள்ள எதாவது வழி இருக்க என்று கேட்டான் மோகன். இல்ல மோகன். இது இப்போ ரொம்ப கஷ்டம். நான் ட்ரை பண்ணிட்டு சொல்லுகிறேன். அது வரைக்கும் ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டு சருமதியும் அவனது உதவியாளரும் கிளம்பினர், அவர்கள் சென்ற பின்பு, வெகு நேரம் வரை இருவரும் ப்ரியாவை பற்றி பெசிகொண்டிருன்தனர். பிறகு,  கார்த்திக் யோசனையில் ஆழ்ந்துவிட, மோகன் ப்ரொடக்சன் பிரச்சனையில் மூழ்கி இருந்தான். சிறிது நேரத்திற்கு பின்பு, பிரச்னை பெரிதாக,
'கார்த்திக், நெறைய ப்ரோடச்சன் ப்ரொப்லெம். மேனேஜர் வேற ஆபீஸ் வர சொல்றான்.  ப்ரொப்லெம் பெரிசா இருக்கு, நான் ஆபீஸ் போய் இஸ்சுவ என்விரோன்மென்ட்ல டீபக் பண்றேன். என் பைக்ல பெட்ரோல் ட்ரை. நா உன்னோட பைக் அஹ எடுத்துட்டு போறேன் என்று சொல்லி விட்டு, பதிலுக்கு காத்திராமல், சார்கரில் இருந்த போனை எடுக்க, அது கொடுத்த லோ பாட்டரி அலெர்ட் ஐ அலட்சியபடுதிவிட்டு, பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
 அவன் கிளம்பி, சரியாக, 10வது நிமிடத்தில், சருமதியிடம் இருந்து போன் வர, கண்மூடி இருந்த கார்த்திக் போனை எடுத்தான்.
'ஹலோ, கார்த்திக்?, நா சாருமதி பேசுறேன்' என்று பதட்டமாக பேசினாள்.
'அங்க மோகன் இருக்காரா?  அவருடைய மொபைல் ட்ரை பண்றேன். நாட் ரியச்சப்ல்நு வருது. உன் கூட இருந்த அவர் கிட்ட கொடு.'
'என்ன ஆச்சு மேடம்? ஏன் இவ்வளவு பதட்டமாக பேசுறீங்க?' என்று கார்த்திக் பதட்டதுடன் சோபாவில் இருந்து எழுந்தான்.
'இங்க பாரு கார்த்திக், எக்காரணம் கொண்டும் மோகனை வீட்ட விட்டு வெளியே விட்டு விடாதே, அப்படி அவன் வீட்டை விட்டு போனால், அவனது உயிருக்கே ஆபத்து.' என்றாள் சாருமதி.
கார்த்திக்கிற்கு உடல் எல்லாம் சிலிர்க்க, 'மேடம். என்ன சொல்றீங்க? அவன் இப்போ தான் 10 நிமிஷம் முன்னாடி ஆபீஸ்ல ஒரு ப்ரொப்லெம்நு வீட்டை விட்டு கிளம்பினான்'
'ஐயோ கார்த்திக். என்னால இப்போ விவரமா சொல்ல முடியாது. நா என்ன விசயம்னு அப்பறமா விவரமா சொல்றேன். முதல்ல அவன தொடர்பு கொள்ள முடியுமான்னு பாரு. அவன் ஆபீஸ் பக்கத்துல இருக்கற சிக்னல் பக்கம் இப்போ போக வேண்டான்னு சொல்லு.  அவனை எப்படியாவது என்னோட ஆபீஸ்கு கொண்டு வா ப்ளீஸ்' என்றாள்.
இதோ இப்போவே நா போறேன். என்று பதட்டத்துடன் பைக் கீயை எடுத்துக்கொண்டு, வாசலை நோக்கி ஓடினான். பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டே, கார்த்திக்கின் போன் ஐ தொடர்பு கொண்டான்.
ரிங்கனது. மோகன் பிக் அப், பிக் அப். என்று சொல்லிக்கொண்டே, பைக்ஐ திருப்ப, பைக் திணறி திணறி ஆப் ஆனது. கிக்கரை உதைத்து பார்த்தான். பெட்ரோல் இல்லாமல், போனது அப்போது தான் உணர்ந்தான். 'ச்சே. இவன்கிட்ட எதனை தடவ சொன்னாலும், வண்டியை இப்படி ட்ரை பண்ணி நிப்பாட்டி இருக்கனே என்று மோகனை திட்டி கொண்டே, சருமதிக்கு போன் செய்தான். மறுமுனையில் சாருமதி எடுக்க, "என்ன கார்த்திக். மோகன் கிட்ட பேசினாய?" என்றாள். இவன் நடந்தவற்றை கூற, 'என்ன பசங்கப்பா நீங்க, எவ்ளோ பெரிய ஆபத்தில் இருக்கிறன் தெரியுமா? மோகன் ஆபீஸ் அட்ரஸ் சொல்லு. நானே கார்ல போய்க்கிறேன்" என்றாள், கார்த்திக் அட்ரஸ் சொல்ல, சாருமதி டிரைவர் உடன் கிளம்பினாள், கார்த்திக்கிற்கு நடந்தவற்றை கூறியவாறே.
'கார்த்திக், நீங்க நெனைக்கற மாதிரி பிரியா மோகனுக்கு உதவி செய்தது உண்மை தான். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. உங்களுக்கு ராகேஷ் ஐ ஞாபகம் இருக்கிறதா?"
"ப்ரியாவுக்கு லோன் ஏற்பாடு செய்த ராகேஷ் அஹ?" என்றான்.
"எஸ். அவனே தான். நீங்கள் உங்க பிரின்ட் பிரியா மேல வச்சிருந்த பாசத்தால, மோகன் அவன் போலீஸ்ல் கம்ப்ளைன்ட் செய்ஞ்சு, அரஸ்ட் பண்ணிருக்கிங்க. அந்த டைம்ல அவனோட தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்காங்க. அந்த கல்யாணத்துக்கு, இவன் வொர்க் பண்ண பிரைவேட் பேங்க் இவனோட இன்சென்டிவ் 3 லட்சம் தர இருந்தது.  மேலும் 2 லட்சம் கடனாவும் தர்றத இருந்தது.கூடவே, இவனது வொர்க் பெர்போர்மான்ஸ் பிளஸ் மோகன்கூட வேல செஇஞ்சுட்டு இருந்த ராஜி, ஸ்ரீகாந்த், பார்த்திபன் இவங்க எல்லோரும் லோன் வேண்டாம்னும், ப்ரியாவின் சாவிற்கு ராகேஷ் காரணம்னும் சாட்சிய இருந்திருக்காங்க.  ஆனா, இந்த பிரச்சனைல அவன் கைதான பொது,  அவனுக்கு பங்கில் இருந்து எந்த விதமான சப்போர்ட்ம்  செய்ய வில்லை. அது மட்டும் இல்லாமல்,இதெல்லாம்  அந்த பிரைவேட் பேங்க் சொல்லிய முறைகள்நாலும், இதெல்லாம் வ்ரிட்டேன்  ல இல்ல இவன் பங்கின் விதிமுறைகளை மீறி, நடந்து கொண்டதாகவும், பங்கின் நற்பெயரை காப்பாற்றி கொள்ளவும், ராகேஷ் ஐ பணிநீக்கம் செய்துள்ளது. . அவனுக்கு சேர இருந்த பணமும் இவனுக்கு கிடைக்க வில்லை. இதனால, அவனோட தங்கச்சி கல்யாணம் நின்னு போனது, வேலையும் போய்டுச்சு. இதுல நடந்த ஒரே விஷயம், பிரியா தற்கொலை செய்ஞ்சது. நம்மால் எவ்வளவு கட்டமுடியும்னு, வருமானதிற்கு அதிகமா கடன் வாங்கறதும், வாடிக்கையாளர்களால் எவ்வளவு கட்ட முடியும்னு வருமான உச்சத்திற்கு அதிகமா கடன் கொடுக்கறதும், இதுல ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. இப்போ ராகேஷ் உயிரோட இல்ல. பிரியா இறந்து, ராகேஷ்கு தண்டனை கிடைச்சப்போ, அவன் தங்கை கூட வந்து பார்க்க வில்லை. இதெல்லாம் தாண்டி, 6 மாத தண்டனைக்கு பிறகு வெளியே வந்த ராகேஷ், பங்கில் வேலை கிடைக்க வில்லை. வேற வேலையும் கிடைக்க வில்லை. இதற்கு எல்லாம் காரணமாய் இருந்த உங்க பிரின்ட், மோகனை பழிவாங்க, நைட் ஷிபிட்இல் வொர்க் பண்ணிகொண்டிருந்தவனை, மடக்கி கொல்ல திட்டம் போட்டு இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, அந்த விபத்தில் இருந்து மோகனை காப்பாற்றியது பிரியா. ஆனால், ராகேஷ் அதே சிக்னலில் லாரியில் அடிபட்டு,  அச்சிதேன்ட்ல இறந்துவிட்டார்.  இப்போ, மோகனின் உயிர் பறிக்க துடித்து கொண்டிருப்பது,  அதே ராகேஷ் தான். ராகேஷிடம் இருந்து, காப்பாற்றவே, பிரியா எல்லா இஸ்சுவையும் சால்வ் செய்து, உதவி செஜிருக்காங்க."  என்று முழுவதையும் கூறி முடித்தாள் சாருமதி. இப்போதைக்கு நங்கள் எவ்வளவு சீக்கிரம் உங்க ஆபீஸ் போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் போறோம். நீங்க, மோகனை ரீச் பண்ண ட்ரை பண்ணுங்க. நானும் பண்றேன்" என்று சொல்லி கால்ஐ கட் செய்தாள் சாருமதி.


சாருமதி திரும்பவும், மோகனின் மொபைல்கு டயல் செய்ய, இந்த முறை ரிங் ஆனது. 'மோகன், தயவு செய்து போனை எடு' என்று திட்டி கொண்டே, காத்திருந்தாள்.
'ஹலோ, சொல்லுங்க சாருமதி. என்றான் மோகன் மறுமுனையில்.
'மோகன்.. இப்போ எங்க இருக்க?'
'ஆபீஸ் கிட்ட இருக்கேன் சாருமதி. என்ன விஷயம்? அன்ய்திங் இம்போர்டன்ட்?' என்றான்.
"ஐயோ மோகன், நீங்க எங்க இருந்தாலும், உடனே, உன் ரூமுக்கு, இல்லைனா, என்னோட ஆபீஸ்கு வா. நீ இப்போ மிக பெரிய உயிர் போற ஆபத்தில் இருக்கிற' என்றாள்.
'தட்..' என ஒரு மிக பெரிய சப்தம் மறுமுனையில் கேக்க, 'பீப்..பீப்.. ' என சௌண்டுடன் கால் முடிந்தது.

Friday, May 22, 2015

பொம்மை

'என்னடா சொல்ற. சதீஷ் வரானா? 4 நாள் முன்னாடி கூட பேசிட்டு இருந்தேனே? சொல்லவே இல்ல?'
'.....'
'என்ன சர்பரைஸ்ஒ போ. யுஎஸ்ல இருந்து வர்றது அவனுக்கு வெளையாட்ட போச்சு. சரி, என்ன விஷயமா வர்றான்? வீட்டுக்காவது தெரியுமா இவன் வர்றது?'
'...'
'அங்கேயாவது சொன்னானே. சரி டா. இப்போ மணி 10 ஆச்சு. காலைல எத்தன மணிக்கு பிளைட் லேன்ட் ஆகுது?, என்ன பிளைட்?'
'...'
'சரி. கார் தான. கண்டிப்பா எடுத்துட்டு வர்றேன். அப்போ நா இப்பவே கெளம்பி அங்க ரூமுக்கு வந்தடறேன் தினா. பாண்டிச்சேரில இருந்து SRP வர எப்படியும் மூணு மணி நேரம் ஆகிடும். அப்படியே சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு,  காலைல நம்ம போய் பிக் அப் பண்ணிக்கலாம். எப்போ கோயம்புத்தூர் போறான்?
'....'
'அப்போ ஓகே. ஒரு நாள் கழிச்சுதான. எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு கிண்டில. சரிடா, நா கெளம்பறேன்.'

எங்க கன்வேர்சசனை வைத்தே என்ன நடக்கிறது என்பதை யூகித்திருப்பீர்கள். ஆம். இப்போ பேசிட்டு இருந்தது, என் ப்ரண்ட் தினேஷ். இன்னொரு ப்ரண்ட் சதீஷ். யுஎஸ்ல இருந்து வர்றான். இப்போ பறந்துட்டு இருப்பானு நினைக்கிறேன். அல்மோஸ்ட் ஒரு வருசத்துக்கு பிறகு பக்க போறேன் அவனை. நான், பாண்டிச்சேரில சொந்தமா ஒரு ஹோட்டல் நடத்திட்டு வருகிறேன். புதுசா கார் வாங்கினேன் ஒரு வாரம் முன்னாடி. பாண்டிச்சேரில தா ரேகிச்டேர். போர்ட் பியாஷ்டா. பிக் அப் எப்படி இருக்குனு டெஸ்ட் பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன். நல்ல ரோடு இங்க இருந்து சென்னை போக வரைக்கும். புல்அஹ டெஸ்ட் பண்ணி பாக்கணும்நு முடிவு பண்ணிட்டேன்.
இன்னிக்கு புதன் கிழமைன்றதால அவ்ளோ ரஷ் இல்ல ரோடுல. சம்மர் டைம், கண்ணாடிய எறக்கி விட்டுட்டு, புல் ஸ்பீட்ல வந்துட்டு இருந்தேன்.
கொஞ்சமும் சிரமம் இல்லாமல், வண்டி 180 kmph ஐ தொட்டிருந்தது. ஒரு விநாடி மூடிய கண் திறக்க இயல வில்லை. தொப் என்ற சப்தம் கேட்க, ஒரு குலுக்கலுடன் வண்டியை நிறுத்தினேன்.
' ச்சே. தூங்கிவிட்டேனா. யாரவது மேல் மோதி விட்டேனா?' என என் நெஞ்சம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மணி 12:05 என டஷ்போர்ட் சிவப்பு எழுத்தில் காட்டியது.  பதட்டத்துடன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கினேன் கையில் டார்ச் உடன்.
 சுற்றிலும் சில்வண்டு சப்தம் கேக்க, எந்தவிதமான அசைவுகளோ, நடமாட்டமோ இல்லை. தூரத்தில் மட்டும் ஒரு சில வீடுகளில் மஞ்சள் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. எதுவும் நடக்கவில்லை என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டு, மீண்டும் வண்டியை கிளப்பினேன்.
கலையில் சதீஷ் ஒரு 5 மணிபோல் ஏர்போர்ட் வாசலில் வரவேற்று, தினேஷ் ரூமிற்கு வண்டியை செலுத்தினேன். இன்றைய பொழுது எப்படி போனதென்றே தெரியாத அளவிற்கு ஊரை சுற்றி, பலகதைகள் பேசி, எவனிங் 9 அளவில், ஒரு ரூமில் ஆஜரானோம். சதீஷ் வாங்கி வந்த சிங்க்ல் மால்ட் விஷ்கிஐ கலி செய்ய ஆரம்பித்தோம்.  இன்று நைட் நான் திரும்பவும் பாண்டிச்சேரி போக வேண்டும், கலையில் இருந்தே ஹோட்டல் புக்கிங், அது, இது என பலவேலைகள் இருக்கிறது. இதை தினேஷிடமும், சதிஷிடமும் முன்கூட்டியே சொல்லியிருந்தேன். சரக்கடிக்க ஆரம்பித்தபின், எப்படி டைம் போனதென்றே தெரியவில்லை. எதேச்சையாக மணியை பார்க்க, மணி 11:45 என கட்டியது. தினேஷிடமும், சதிஷிடமும் சொல்லிவிட்டு கிளம்ப, வெளியில் வந்து சில நேரம் பேசிகொண்டிருந்தோம். பிறகு விடை பெற்று, காரில் ஏறினேன். எதேச்சையாக டஷ்போர்ட்ன் மேல் பார்க்க, ஒரு பொம்மை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. 'என்ன பொம்மை இது, எப்படி இங்கே வந்தது, என கேட்டேன் போதையில்.


சதீஷ் அதை பார்த்துவிட்டு, 'டேய். அது அழகா, க்யுட் அஹ இருக்கு. விடுடா' என்றான். அவனுக்கு அழகாகவும், க்யுடாகவும் தெரிந்த பொம்மை, எனக்கு அகோரமாய் தெரிந்தது. அதற்க்கு மேலும் அவர்களிடத்தில் விவாதிக்காமல், காரை ஸ்டார்ட் செய்தேன். கைகளை அசைத்தவாறே. OMR ரோடுஐ கடந்து, சோளிங்கநல்லூர் சிக்னலில் ரைட் கட் செய்து, ECR ரோடுஐ பிடித்தேன். சில கார்களும், லாரிகளும் எதிரில் கடந்து சென்றது. ஸ்பீடோ மீட்டர்ஐ பார்த்தேன் 180 அருகே நொண்டி அடித்துகொண்டிருந்தது. மீண்டும் தொப் என்ற சப்தத்தை தொடர்ந்து, கார்  என்ஜின்ஐ உறும வைத்தது, பின் அமைதியாக்கியது. நேரம் 12:05 என காட்டியது. 'ஒருவேளை கார் பயந்து போயிருக்குமோ, என்றவாறு, காரை ஓரமாக விட்டு டார்ச்சுடன் இறங்கினேன். அதே இடம்.
கார் எதாவது ப்ரபலமா இருக்குமோ என யோசித்தவாறு காரை சுற்றி பார்த்தேன். யாரவது நடமாட்டம் இருக்கிறதா என பார்த்தேன். காரில் வேற எதுவும் தெரியாது. ஒருவேளை தெஜவு ஆகா இருக்குமோ, என யோசித்தவாறு மீண்டும் காரில் ஏறினேன் கடவுளை வேண்டியபடி. என்ஜின்ஐ உசுப்ப, அது முரண்டு பிடிக்காமல் ஸ்டார்ட் ஆகியது. ஏதோ மாற்றம் இருப்பது போல தோன்ற, டஷ்போர்ட், கண்ணாடியை உற்று கவனித்தேன். அந்த பொம்மையை காண வில்லை. காரில் விழுந்திருக்கலாம் என கீழே பார்த்தேன். காணவில்லை. காரை விட்டு இறங்கும் பொது விழுந்திருக்கலாம்' என சமாதானபடுத்திகொண்டேன்.
கீழே இறங்கி அதை தேடும் நிலைமையில் நான் இல்லை. காரை நகர்த்தி, பாண்டிச்சேரியை நோக்கி விரட்டினேன். வீட்டை அடைய மணி 2:30 ஆகி இருந்தது. காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, வீட்டை திறந்தேன். நேற்றைய நியூஸ் பேப்பர் தட்டுபட அதை எடுத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன் ஹாலில் லைட் எரிந்து கொண்டிருப்பதை. லைட் ஆப் செய்து விட்டுதான் போனதாய் எனக்கு ஞாபகம்.
எனக்கு இருக்கும் ஞாபக மறதியில், அதிகம் யோசிக்கவில்லை. அறை முழுவதும் சில்லென்று இருந்தது. ஒருவேளை சென்னை போகும் அவசரத்தில், ஏசிஐ ஆப் செய்ய மறந்துவிட்டேனோ' என என்னை திட்டியபடி ஏசியை செக் செய்தேன். ஏசி ஆப் ஆகியே இருந்தது. ஏசியை ஆன் செய்தபடி, பெட்டில் விழுந்தேன். கையில் இருந்த பேப்பர்ஐ வீசி விட, அது சிதறியது. அதில் இருந்து ஒரு செய்தி என்னை திக்குமுக்காட செய்தது.

''ECR ரோட்டில் ஹிட்-N-ரன் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை"

இதை படித்ததும், என் உடல் ஒருவித நடுக்கத்திற்கு ஆனது. ஏசி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. ஏசியை அதிகப்படுதிவிட்டு, பிளங்கட்ஐ போர்த்தி படுத்தேன்.
சிறிது நேரத்தில், என் முதுகு மிகவும் குளிரக உணர, திரும்பி படுத்தேன்.

காரில் இருந்த பொம்மை என்னை பார்த்தவாறு, என்னை ஏதோ கேட்பது போல பெட்டில் கிடந்தது.

<பயணம் முடிந்தது>

Monday, October 27, 2014

பூனைக்குட்டி




'எப்படியோப்பா..நீ ஊருக்கு வர்றேன்னு சொன்னதே, ரொம்ப சந்தோசமா இருக்கு.'
.....
'டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டே இல்ல? '
..
'என்ன தேதி? தீபாவளிக்கு முன்னாடி தான?'
..
'சரி.. அப்பா கிட்ட போன் தரட்டுமா? நீயே ஒரு வார்த்த சொல்லிடு'
...
'சரிப்பா.. நீ பேச வேணாம். காயத்ரி கிட்ட போனை கொடு. நா பேசிக்கறேன்' முடியை சரி செய்தவரே, திரும்பி தன் கணவனை பார்த்தாள் சிவகாமி. கொஞ்ச நேரம் முன்னாடி தெரிந்த சந்தோச பிம்பம் நொடி பொழுதில் காணாமல் போயிருந்தது முருகேசனிடம். கட்டிலில் இருந்து இறங்கி வெளியே சென்றார் முருகேசன். சிவகாமியின் எப்பொழுதுமான கேள்விகளும் பதில்களும், காயத்ரியின் கேள்விகளும், பதில்களும் முருகேசனின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது.நடக்க நடக்க, மெதுவாக சிவகாமியின் குரல் மறைந்து, அந்த தென்னை மர காற்றின் சப்தம் கேட்க தொடங்கியது. நடந்து சென்று, கிணற்றின் அருகில் இருந்த தொட்டியின் விழும்பில் அமர்ந்தார். முக்கால்வாசி  தென்னை மரங்களில் இப்போது பாளை பிடித்து, பூ விட ஆரம்பித்திருந்தது.  சில மரங்களில் குரும்பைகளும், இளநீருகளாகவும் காய்த்திருந்தன. முன்பு ஒருநாள் கன்றுகளாய் நட்ட நாள் முருகேசனுக்கு நினைவிலாட, கூடவே அந்த துர்சம்பவமும் அவனுக்கு நினைவில் வந்தது. இவனை அறியாமல், கண்களில் நீர் வழிந்தது.  முருகேசனின் பின்னல் நிழலாட, கண்ணை துடைத்துக்கொண்டு, திரும்பி பார்த்தான். சிவகாமி நின்று கொண்டிருந்தாள்.
'எப்போ வர்ரனாம்?' என்றார் எங்கோ பார்த்து கொண்டு.
'தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி.' என்றாள்.
'காயத்ரி எப்படி இருக்கா? எவ்ளோ நாள் இருப்பாங்க?' கேட்டுகொண்டே, எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
'அவ நல்ல இருக்கா. ரெண்டு வாரமாம்.  கவினும்.' என்றவள், முருகேசனின் முகம் மாறியதை அறிந்து அமைதியானாள்.
'சரி. வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும். ஆளுகள வரசொல்லிருக்கேன். மொத்தம் ஒரு 4 பேர் வருவாங்க. பாத்துக்க' என்றவர், சிறு அமைதிக்கு பின், 'நான் மட்டும் அன்னிக்கு அவ்வளவு அவசர படாமல் இருந்திருந்தால், இன்னைக்கு என் பேரனுக்கோ பேத்திக்கோ ரெண்டுமூணு வயசு ஆகிருக்கும். இல்ல?' என்றார்  எங்கோ பார்த்து கொண்டு.
 'ஏங்க இப்படி எல்லாம் பேசறிங்க? அன்னிக்கு நடந்தது விபத்து. குக்கர் வெடிக்கும்னு நம்ம என்ன கனவா காண முடியும்? அன்னிக்கு நான் கல்யாணத்துக்கு போயிருக்கவே கூடாது.' என்றாள் சிவகாமி.
'இல்லை. அன்னிக்கு நா கொஞ்சம் கோவபடாம இருந்திருக்கணும். கோவமா போன்ல பேசிட்டு அவசரமா வெளியகெலம்பியதுதான்  காயத்ரி அவசர அவசரமா சமைக்க காரணம். அதனால தான். என் வம்சம்  துளிர் விடும் முன்னே கறிகிடுச்சு.' என்று அழ ஆரம்பித்தார்.
'அழாதீங்க. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. கவினை நம்ம பேரனா ஏத்துக்கலாம்ங்க.'
திரும்பி சிவகாமியை பார்த்தவர், வேகமாக வீட்டுக்கு போனார்.

'பையன் வர்றானு வீடே அமக்களப்படும் போலவே' என்றவாறு வீட்டு திண்ணையில் உக்கார்ந்தார் முருகேசனின் நண்பர் சாரதி. வீடு மொத்தமும் பெயிண்ட் அடிக்க ஆட்கள் வந்திருந்தனர். அவர்கள் வேலையை ஆரம்பிக்கவும் செய்திருந்தினர். சில சுவர்களில் புது வண்ணங்கள் ஜொலிக்கவும் ஆரம்பித்திருந்தது.



'வாங்கணா. ஆமாண்ணா.. மூணு வருஷம் கழிச்சு வர்றான். அதான். அவரு இப்பதான் தண்ணி எடுத்துவிட தெற்கு தோட்டம் போயிருக்காரு. வர்ற எப்படியும் ஒரு மணி நேரம்ஆகும். காபி சப்பட்ரீங்கள?' என்றாள் சிவகாமி.
'கொஞ்சம் குடுமா. அமெரிக்கா போய் மூணு வருஷம் ஆகிடுச்சா. வரட்டும் இந்த ரகு. இங்க எங்கயாவது மாத்திட்டு வர சொல்லலாம். போன் பண்ணான?' என்றார் வெகு உரிமையாக,  சமயலறையில் இருந்தவாறே பதில் கூறினாள், 'நேத்து பண்ணிருந்தான். அப்பா கிட்ட பேசறயநு கேட்டேன். மட்டேனுட்டன்.'
'என்னமா செய்ய. இப்படி ரெண்டு பேரும் பிடிவாதம் பண்ண என்ன பண்ண?'
'காயத்ரி மாசமா இருக்கறப்பவே அந்த ரகு பையன் தத்து எடுக்கனும்னு வந்து நின்னான். அப்பவே இவன் சரின்னு சொல்லிருந்தா, பிரச்னை இல்லாம போயிருக்கும். இவன்தான் புடிவாதமா முடியாதுன்னு சொல்லிட்டனே.' - இது சாரதி. முருகேசனின் உற்ற நண்பர். முருகேசனின் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியம், பிரச்னை என்றாலும், இவருக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது.
'ரகு மட்டும் சும்மாவா இருந்தானா என்ன? இவரு வேணாம்னு சொல்லியும், கவினை தன் பிள்ளையா தத்து எடுத்துகிட்டானே? கவினுக்கு இப்போ ரெண்டு வயசுனா. இதுவரைக்கும் அவனை பார்த்தது கூட கிடையாது' சொல்லிக்கொண்டே காபிஐ நீட்டினாள் சிவகாமி.
'சரி விடுங்க. அதான் அவனே வர்ரன்ல. பாத்துக்கலாம். ரேணு எப்படி இருக்காண்ணா? தீபாவளிக்கு வர்ராங்கள?' கேட்டாள்.
'ஹ்ம்ம். வர்றாங்க. ஒரு ரெண்டு வாரம் இருப்பாங்கனு நெனைக்கறேன். மாப்பிளைக்கு ரெண்டு நாள்தான் லீவ் போல. அவரு தீபாவளி அன்னிக்கு தான் வர்றார். ரேணுவும் பேத்தியும் நாளை கழிச்சு வர்றாங்க.' என்றார் காபிஐ குடித்தபடி.
'இப்படி எதாச்சும் விசேசம்னா தான் எல்லாரையும் பாக்க முடியுது. மெட்ராஸ்ந என்ன, அமெரிக்கானா என்ன. நமக்கு எல்லா ஒன்னுதாண்ண.' என்றாள் சிவகாமி.
'அதென்னமோ வாஸ்தவம்தாம்மா. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. பாருங்க. ரேணுவும்  ஐஷும் வந்தா, வர சொல்றேன். சரிமா. டைம்ஆச்சு நா கெளம்பறேன். சாயந்திரமா அவன கோயில்ல பாக்கறேன்னு சொல்லு' என்று கூறிவிட்டு, எழுந்தார்.
'ஹ்ம்ம். சரிண்ணா' என்றவள், பெயிண்ட் அடிப்பவர்களின் மேல் கவனத்தை செலுத்தினாள்.


இரண்டு வாரம் கழித்து, வீடு முழுதும் புத்தம் புது பெயிண்ட் வாசனை நிரம்ப, ஜொலித்தது. ரேணுவும் அவளது மகள் ஐஷும் வந்திருந்தார்கள்.
ரேணுவும் சிவகாமியும் சமயலறையில் பேசிகொண்டிருக்க, இரண்டு தாத்தாக்களும், 4 வயதான பேத்தியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், திணறி கொண்டிருந்தனர். முருகேசனின் வீட்டில் இருந்த பூனை, குட்டிகள் போட்டிருக்க, அதை பற்றி, ஐஸ்வர்யா கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.
'முருக் தாத்தா, ஒன், டூ. 2 கிட்டேன்ஸ்ம் இந்த கேட் தான் அம்மாவா?' முருகேசனை முருக் தத்தா என்றே கூப்பிடுவாள்.
'ஆமாடா செல்லகுட்டி. நீ எப்படி ரேணுக்கு செல்ல குட்டியோ, அதே மாதிரி இந்த குட்டிகளுக்கு, இந்த பெரிய பூனை தான் அம்மா.' என்றார் கன்னத்தை கில்லி கொண்டே.
'அப்படியா தாத்தா. அப்போ இந்த குட்டியோட டாடி? இந்த குட்டிகளுக்கும் தாத்தா, பாட்டி எல்லாம் இருக்காங்களா?' என்றாள்.
'ஹா.. ஹா.. ஆமா தங்கம். அதுகளுக்கும் பாட்டி, தாத்தா எல்லாம் இருக்காங்க. அவங்க எல்லாம் தோட்டத்துல இருக்காங்க.' என்றார் சிரித்தபடி.
'உங்களுக்கு வேற வேல இல்ல. குட்டி போட்டு ரெண்டு வாரம் ஆச்சு. கண்ணு மொளச்சு, நல்ல கொஞ்சம் வளந்திடுச்சு. பேசாம கொண்டு போய், இத எங்காவது விட்டுட்டுவாங்கனு சொன்னா கேட்டதான?' என்று பொருமியாவரே காரம் இனிப்பு தட்டுக்களுடன் வந்தாள் சிவகாமி.
'இவ ஒருத்தி. இதுக குட்டிக. இதுகள கொண்டு போய் எங்க விட சொல்ற? பாவம் அதுக. உங்க பாட்டிக்கு கொஞ்சம் கூட வெவஸ்த்தையே கெடயாது. நீயே சொல்லு ஐஷு குட்டி. இத கொண்டு போய் எங்காவது விட்டா, அது பாவம் தான? ' என்றார் ஐஷுவை கையில் தூக்கி கொண்டு.
'ஒரு வாரம் பொறுத்துக்க. நம்ம தோட்டத்துல இருக்கற சுப்பிரமணி வீட்ல ஒரே எலி தொல்லையாம். அவனுக்கு இந்த ஒரு குட்டிய கொடுத்து விட்டுடறேன்.'

'தாத்தா. அப்போ இந்த குட்டி, அம்மாவை விட்டுட்டு இருந்துக்குமா? அம்மாவை விட்டு பிரிஞ்சா, பாவம் இல்ல? அது மில்க் எல்லாம் என்ன பண்ணும்?'
'ஹ்ம்ம். என்ன பண்ணும்? இந்த குட்டிய யார் எடுத்துட்டு போராங்களோ, அவங்க இந்த குட்டிய நல்ல பாத்துக்குவாங்க. நல்லவங்களா பாத்து குட்டிய கொடுக்கணும்.'
ஐஷு கேள்வி கேட்க, கேட்க, முருகேசனுக்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறைவதை, கவனிக்க தவறவில்லை சிவகாமி. இதுதான் சமயம் என்று, 'என்ன பாத்து கொடுத்து என்ன பிரயோசனம் ஐஷுகுட்டி..
அது நல்ல இருக்கா, இல்லையானு யார் பாப்பாங்க? வாங்கிட்டு போறவங்க, கண்டுக்காம இருந்திடலாம். இல்லையா?' என்றாள் சிவகாமி. முருகேசனின் முகம் மாறியது.

'முருக் தாத்தா.. நீங்க வொர்ரி பண்ணாதீங்க.  நாவேணா ஒரு குட்டிய எங்க வீட்டுக்கு எடுத்துக்கவா? நா நல்ல பாத்துக்கறேன். டெய்லி மில்க், பிஸ்கட் எல்லாம் கொடுத்து, நல்ல பாத்துக்குவேன்.'

ரேணு,'ஐஷு.. நோ. டாட் வென்ட் லைக் இட்.  நம்மாள இதெல்லாம் அபர்ட்மெண்ட்ல வச்சு, பாத்துக்க முடியாது.' என்றாள் கண்டிப்புடன்.

'அதெல்லாம் முடியாது. தாத்தா இந்த குட்டிய எங்கயாவது விட்டா, அது பாவம் தான. அது என்ன பண்ணும்? நம்ம வீடு தான் பெரிய வீடுல. அங்க இத வச்சுக்கலாம். தாத்தா, தத்தா ப்ளீஸ் தாத்தா, நீங்க சொல்லுங்க. ப்ளீஸ்.' என்றாள் தாத்தாவின் தாடையை தடவியாவாறே.

'ஹா ஹா. சரிம்மா. ஆனா அம்மா சொல்றதுலயும் ஞாயம் இருக்கில்ல. அங்க டவுன்ல வச்சு வளர்த்த முடியாதுமா. அதுவும் இல்லாம, அங்க நிறைய பெரிய பெரிய ரோடு, பெரிய பெரிய வண்டியெல்லாம் வரும். பூனாச்சியால ரோடு கடக்க தெரியாது. நீயும் ஸ்கூல் போய்டுவா. இல்லையா? அதனால, இந்த பூணாச்சி குட்டி இங்கயே இருக்கட்டும். நீ எப்போ இங்க வர்ரயோ, அப்போ அது இங்கயே இருக்கும். சரியா?' சமாதனபடுத்தினார்.

'வேணாம் முருக் தாத்தா. நா நல்ல பாத்துப்பேன். என் ரூம்ல அதை பத்திரமா வச்சுக்குவேன். வெளில போக விடமாட்டேன்' என்றாள் விடாபிடியாக. சிறிதாய் அழவும் செய்தாள்.

'ஐஷு. சொன்ன கேக்கணும். அடம்பிடிக்க கூடாது' அதட்டினாள் ரேணு.

'சரிமா. அழாத. இதுக்கு நா ஒரு ஓசனை சொல்றேன். கேக்கிறியா? இந்த பூணாச்சி குட்டிய, உங்க தாத்தாக்கு கொடுத்துடறேன். அவரு வீட்ல நீ இருக்கறவரைக்கும் பாத்துக்க. அப்பறமா தாத்தா பாத்துக்கட்டும். நீ எப்போ எல்லாம் ஊருக்கு வர்றியோ, அப்போ எல்லாம் நீ அதுகூட விளையாடலாம். என்ன சரியா?' என்றார் முருகேசன். ஒருவாறு சமாதானம் ஆனாள், ஆனாலும், அவளது கேள்விகளை தேம்பல்களுடன் தொடர்ந்தாள்.

இரவு, முருகேசன் யோசனையுடன் கட்டிலில் படுத்திருக்க, சிவகாமி அவ்வோசனையை புரிந்தவளாய், 'என்ன.. யோசனையெல்லாம் பலமா இருக்கு?' என்றாள்.

'கையை தலைக்கு கொடுத்தவாறு, 'ஐஷு ரொம்ப சுட்டி.. கெட்டிகாரி.. இல்ல?' என்றார்.
மெலிதாக சிரித்தவாறே, 'அப்படியா?' என்றாள்.
'ஹ்ம்ம். எவ்ளோ கேள்வி.. எவ்ளோ அழகு.'
'ஹ்ஹ்ம்ம்ம்' - சிவகாமி
'அந்த பையன் பேரு என்ன?' என்று வேண்டுமென்றே கேட்டார்.
தெரிந்தும், 'எந்த பையன்?' என்றாள்.
'அதான். காயத்ரியோட பையன்.' என்றார்.
'அது எதுக்கு இப்ப உங்களுக்கு? அதான் வேணான்னு சொல்லியாச்சுல?' என்றாள்.
'ஹ்ம்ம். அது சரி. இப்ப அவனுக்கு ரெண்டு வசயிருக்குமா?'
'ஹ்ம்ம் ஆமா.' - இது சிவகாமி.
'அவனுக்கு என்ன புடிக்கும்?'
................
..........
....
..


நட்சத்திரங்கள் வானில் நிறைந்திருக்க, வீட்டின் அருகில் இருந்த ஒற்றை தென்னை மரத்தில் பாளை வெடித்து பூத்திருந்த பூக்கள், வாசலில் விழ ஆரம்பித்தன.

**********

Friday, October 10, 2014

ஒரு ரூபாய்


'டேய் ராசு. டேய் ராசு.. எங்க போய்ட்டான் இவன்?' யோசித்தவாறே குடிசையை விட்டு வந்தாள் பார்வதி. பார்வதி ராசுவை தேடும் முன்பு, ஊருக்கு ஒதுக்கு புறமாய் சுடுகாட்டிற்கு அருகில் இருந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுக்க ஊர் தலைவர் கிட்ட அனுமதி வாங்கி, கடன உடனையும், கையில் இருந்த கொஞ்ச பணத்தையும் வச்சு ஒரு வழியா குடிசையும் போட்டாச்சு, நானும் இனிமே ஒழுங்கான குடும்பஸ்தானகி போனான் பார்வதியின் புருஷன் கருப்பன். ஏற்கனவே இருந்த பொறம்போக்கு நிலம் எல்லாம் பட்டா போட்டகிவிட்டது. மொரம்பொக்கு நிலம் சுற்றி கம்பி வெளியும் வந்தாயிற்று. அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகளுக்கும் இனி அதற்குள் அனுமதி இல்லை.  இவ என்னமோ தச்சு மளிகை கட்டிவிட்டதுபோல பக்கது வீடு, இல்ல குடிசைல இருக்கற அம்சா அந்த சிலுப்பு சிலுத்துகொண்டாள்  சின்ன பைய கார்த்திக்கு பால் கேட்டதற்கு. "ஏதோ பக்கத்துல கொழந்தையோட இருக்காளே.. அவகிட்ட கேட்டா கொஞ்சம் பால் கேட்டதுக்கு சகலத்தையும் கேட்டமாதிரி மொரச்சுகுட்டு இல்லேங்கற.? இவ மட்டும் ஒழுகாத சாலைல[குடிசை] இருக்கணும்.. நாங்க மட்டும் அப்டியே  மழைல ஒழுகிட்ட இருக்கற சாலைல கெடக்கணும். ஒரு சாலமேஞ்சதுக்கு இப்படி அங்கலாப்பு படகூடதும்மா.." என்று தன் மனக்குமுறலை வெளிபடுத்திவிட்டு, குடிசைக்கு உள்ளே போய், செலவு டப்பாவில் இருந்து மஞ்சள் படிந்த பத்துரூபாய் தாள் ஒன்றை எடுத்துவிட்டு, நடு விட்டத்த தாண்டி இருக்கற ஒரு கனமான குச்சியில்  போன பொங்கலுக்கு அரசாங்கம் கொடுத்த சேலையில் கட்டிய தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த கார்த்திகை மெதுவாக சேலையை விளக்கி பார்த்தாள்.  கையை கன்னத்தில் வைத்து தூங்கி கொண்டு தான் இருந்தான். "மணி ரெண்டாக போகுது. எப்படியும் இன்னும் சித்தநேரத்துல என்திருச்சுருவான்.  அதுக்குள்ள கடைக்கு போயிட்டு வர முடியாது" என கணித்துவிட்டு, "இந்த பால்காரன் வேற ரெண்டு மூணு நாளா வரல. யார அர்ரெஸ்ட் பண்ண இவனுகளுக்கு என்ன.? பஸ் காரன்ல இருந்து, பால்காரன் வரைக்கும் பந்த். பாக்கெட் பால் வேற நல்ல இருக்காது. வேற வழி இல்லையே" என்று நொந்து கொண்டும்,   ராசுவை போய் பால் வாங்கி வர சொல்லலாம் என குடிசையை விட்டு வந்தாள்.

குடிசைக்கு பின்புறம் வந்து, முன்ன பின்ன பார்த்தாள். தூரத்தில் கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்த வருங்கால கிரிக்கேடேர்ஸ் ஒரு கும்பல் தெரிய, மீண்டும் தன்னுடைய கணீர் குரலால் 'டேய் ராசு..' என கூப்பிட்டாள். அதில் ஒரு ஒல்லியான உருவம் கொண்ட பையன், 'என்னம்மா..' என்று கவனம் கலையாமல் பந்தை பார்த்து கொண்டே கேட்டான். 'இங்க கொஞ்சூண்டு வந்துட்டு போடா கண்ணா கடைக்கு போய் தம்பிக்கு பால் வாங்கிட்டு வாப்பா' என்றாள் குரலின் தன்மையை சற்றே மாற்றி. 'ஒரு ரெண்டு பால்மா.. வந்துடறேன்' என்றான். 'எப்ப பாரு கிரிக்கெட்டு கிரிக்கெட்டு.. இரு உங்கப்பா வரட்டும்' என்பதை மட்டும் மெதுவாக சொல்லிவிட்டு, 'அட.. அவன் என்திரிக்கறதுள்ள வாங்கிட்டு வாடா.. இல்லன அவன் அழுகாச்சிய நிறுத்த மாட்டான். சீக்கரம் வாடா' என்று உரக்க, அதே சமயம் மெதுவாகவும் கத்தினாள்.

மூச்சிரைக்க ஓடிவந்து, 'போறேன். ஆனா எனக்கு ஒருருபா தரனும் பூமர் வாங்க.?' என்று முட்டுக்கட்டை போட்டன்.
'டேய்.. உனக்கு இப்ப எதுக்கு காசு.? பால் வாங்கிட்டு வர்றதுக்கு கூலியா? வர்ற கூலிகாசே ஒழுங்கா வீடு வரமாட்டேங்குது. இதுல இவன் வேற. இரு வர்றேன் என்று குடிசைக்குள் சென்று,  ஒரு ரூபாய் காசு ஒன்றை கடுகு டப்பாவில் இருந்து எடுத்து வந்தாள். 'சீக்கரம் வாடா அவ என்திரிக்கரதுக்குள்ள' என்றவாறு, குடிசைக்குள் போக, தனது மோட்டர் சைக்கிள்ஐ காலில் உதைத்து, வாயால் சப்தமிட்டுக்கொண்டே கடையை நோக்கி ஓடினான்.

பூமர் வாங்கலாமா.. செனட்டர் ப்ரெஷ் வாங்கலாமா என யோசித்துக்கொண்டே, ஊருக்குள்ள இருந்த சிறு மளிகை கடைக்கு வந்தான்.
'தாத்தா.. கால்லிட்டர் பால்' என்று,  வலது பைக் ஹன்ட்ல்பாராய் இருந்த கைக்குள் இருந்த பத்து ரூபாயை எடுத்து நீட்டினான் ராசு.
'டேய். கால் லிட்டர் பணன்றுபாடா, இன்னும் ரெண்ட்ருபா கொடு.' என்றார் அந்த தாத்தா வயதில் இருந்த பெரியவர்.
'தாத்தா.. கால்லிட்டர் பத்து ரூபா தான' என்று  தனக்கு தெரிந்த 3 வகுப்பு கணக்கை கேட்டான் பெரியமனுஷதனமாக.
'கருப்பன் பயனுக்கு வெவரம் எல்லா நல்ல கேக்க வருதே' என ஆச்சர்யமாய் கேட்டுகொண்டே, "ரெண்டு நாளா, பால் பாக்கெட் போடறவன் வரலப்பா. இங்க இருந்து பக்கத்துக்கு டவுனுக்கு போய் ரிஸ்க் எடுத்து, பெட்ரோல் செலவுபண்ணி வாங்கிட்டு வரவேண்டி இருக்கு. அதன் ரெண்டுரூபா ஜாஸ்தி.' என்றார் தன் விலையை ஞாயபடுத்தி.

இது வரை இறுக மூடியிருந்த, இடது ஹன்ட்ல்பாராய் இருந்த இடது கை இப்போது விரிய ஆரம்பித்தது ராசுவுக்கு.
ஒரு ரூபாயை தாத்தாவிடம் நீட்டி, 'தாத்தா.. ஒரு ரூபாதான் இருக்கு. திரும்ப வர்றப்ப மீதி ஒருரூபா தர்றேன்' என்றான்.

அந்த ஒரு ரூபாய் திரும்ப வரபோவதில்லை என முடிவு செய்தாரோ அல்லது சரி போகட்டும் ஒரு ரூபாய் லாபமே என்று நினைத்தாரோ, எதுவும் பேசாமல், ஒரு ரூபாயை வாங்கி கொண்டு, பிரிட்ஜை திறந்து, பால் பாக்கெட்ஐ எடுத்து வந்து கொடுத்தார்.

திரும்பி வீதி வழியாக ஒரு கூட்டம், கைகளில் கட்சி கொடிகளுடன், கூச்சலிட்டு கொண்டு சென்றார்கள். அந்த கூட்டத்தில், காலையில் தலைவனின் விடுதலைக்காக உயிரை கொடுத்து கத்தி கொண்டிருந்தான் கருப்பன் 'விடுதலை செய்.. விடுதலை செய்.. எங்கள் தலைவனை விடுதலை செய்.'

ஒரு கையை மீண்டும் இறுக்கி ஹன்ட்ல்பாராய் மாற்றி கொண்டு, மறுகையால் பால் பாக்கெட்டை சுமந்த படி, ராசுவின் மோட்டார்சைக்கிள்   வீட்டை நோக்கி விரைந்தது.

***************முற்றும்********* போராட்டம் அல்ல.. பால் விலையும் அல்ல..


நினைவுதிர் காலம்



 'டேய்.. எனக்கு ஒன்னும் இல்ல. நீ மொதல்ல ஆஃபீஸ் கெளம்பு.' இரும்பிய  படியே பெட்டில் இருந்து எழுந்தாள் காவ்யா.
'இல்ல. உனக்கு இன்னும் ஃபீவர் இருக்கறமாதிரி இருக்கு. வேணும்னா  இன்னைக்கும் வொர்க் ஃபரம் ஹோம் போடறேனே..?' இது ரிஷி.
ஆஃபீஸ் கெளம்ப ரெடி ஆனாலும் காவியாவை இப்படி விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், ரிஷிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் என்பதால், ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்தான்.
'யு கேரி ஆன் ரிஷி. ஐ வில் டேக் கேர் ஆஃப் மைஸெல்ப்' என்று சொல்லி விட்டு, அவனை முதுகில் கை வைத்து தள்ளினாள்.
'சரி. நா கெளம்பறேன் அப்போ. பத்திரமா இரு. ஓகே வா? ஏதாவது முடியலைன்னா கால் பண்ணு' என்று சொல்லிக் கொண்டே, அபார்ட்மெண்டில்  இருந்து கீழே இறங்கி, கார் ஸ்டார்ட் பண்ண, பால்கனியில் இருந்து அவனை பார்த்துக்  கை அசைத்தாள்.
'பார்த்தியா.. அவன் உன்ன விட்டுட்டுப்  போய்ட்டான். அவனுக்கு, உன்ன விட, ஆஃபீஸ் தான் முக்கியம்.'
திடுக்கென்று சுத்தியும் பார்த்தாள் காவ்யா. மீண்டும் அந்த குரல் அவளுக்கு கேட்டது.
'இல்லை. அவன நான் தானே ஆஃபீஸ் போக சொன்னேன்? அப்பறம் எப்படி அவனை குறை சொல்ல முடியும்? ரெண்டு நாள் லீவ் போட்டு, என் அருகில் இருந்து கவனித்து கொண்டானே?' எதிர் கேள்வி கேட்டாள் காவ்யா.
'அப்போ.. நீ போனு சொன்னதும்..ஏன் அவன் ஆஃபீஸ் போறான்? உனக்கு தான் இன்னும் உடம்பு சரியாகலையே?' - குரல்

'இல்லை. நீ என்னை குழப்புற. ஐ வோன்ட் அக்ரீ. அயம் ஆல்ரைட் ' மூச்சிரைக்க ஆரம்பித்தது காவ்யாவுக்கு. வேகமாக உள்ளே சென்று, ஃப்ரிட்ஜ்ஜை திறந்து, வாட்டர் பாட்டிலை காலி செய்தாள்.
'அப்போ அதை நிரூபிச்சுக் காட்டு' என்றது குரல்.
'இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற?'
'கத்தியை கையில் எடு' எதுவும் பேசாமல் கத்தியை எடுத்தாள்.
'இப்போ உன் கையை வெட்டு. அவன் வர்ரானானு பார்க்கலாம்.' என்றது.
மறுப்பேதும் கூறாமல், கத்தியை இடது கையில் எடுத்து, வலது கையை லாவகமாய் நீட்ட, கூர்மையான அந்தக் கத்தி, கையில் மெலிதாய் கீறியது.
'நான் மெதுவாக கீறினேனா இல்லை கத்தி ஏதாவது ப்ராப்லமா என அவளது மூளை அவளுக்கு யோசனைகளை அனுப்ப, மெதுவாக, சிவப்பு கோடு தெரிய, ரத்தம் கையில் இருந்து வடிய ஆரம்பித்தது. சுயநினைவுக்கு வந்த காவ்யா பதறிப்  போய், போன் எடுத்து, ரிஷி நம்பரை டயல் பண்ண, இரண்டாவது ரிங்கில் எடுத்தான்.
'ஹலோ காவ்யா. சொல்லு.' என்றான்.
'ரிஷி.. மறுபடியும்.. ' என சொல்ல வந்தவள், தலையை ஏதோ சுழற்ற, மயங்கி விழுந்தாள்.

நினைவு வரும்போது, கைகளை பிடித்து, தடவிக்கொண்டு, காவ்யாவின் அருகில் ரிஷி உட்கார்ந்திருந்தான். 'எங்கே விழித்துப்  பார்த்தால், கையை விலக்கி விடுவானோ' என்று கண்கள் மூடியபடியே படுத்திருந்தாள்.

ஒரு வார ஓய்வுக்குப்  பின், ஆஃபீஸ் போக தயாராகிக் கொண்டிருந்தாள் காவ்யா. 'ரிஷி.. லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போ.. வழக்கம் போல மறந்துடாதே.' சொல்லிவிட்டு, ஐபோனில் வெதறை ஒரு நோட்டம் விட்டாள்.  விண்டர் கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு, கார் கீயை  எடுத்து, ஆட்டோ ஸ்டார்ட் பட்டனை அழுத்தி விட்டு,  லஞ்ச் பேக், லேப்டாப் பேக் உடன் அபார்ட்மென்ட்டில் இருந்து வெளியே வர, சிகாகோ ஒற்றி இருந்த அந்த கிராமத்தை விடிய விடிய பருத்தி பஞ்சாக மாற்றிவிட்டிருந்த பனி, அவளது முகத்தையும், விண்டர் கோட்டையும் தன் வெண்துளிகளால் நிரப்ப பார்த்தது. வழக்கம் போல தன்னுடைய ரத்த நிற கேம்ரி, வெண்கம்பளம் போர்த்தியது போல பனி மூடியிருந்தது. ஸ்டார்ட் ஆகியிருந்த காரை  அன்லாக் செய்து, கொண்டுவந்த பேக்ஸை பின்னாடி வைத்து விட்டு, கிளிப்பை எடுத்து மாட்டிக்  கொண்டு, கிளீனிங் பிரஷால் அந்த பனியை விளக்க, மறைந்திருந்த ரத்தநிற ரதம் வெளிப்பட்டது. டிசம்பர் மாத குளிர் காற்று, அவளது மூக்கையும் காதையும் ஒரு பதம் பார்த்து கொண்டிருந்தது.
காரை எடுத்துக்கொண்டு, ஆஃபீஸை  நோக்கி காரை விரட்ட, அது அம்பாக சீறிப்  பாய ஆரம்பித்தது.

ஆஃப்ஷோர்க்கு அனுப்ப வேண்டிய மெயில்களுக்கு எல்லாம் ரிப்ளை  பண்ணிவிட்டு, எல்லாமீட்டிங்கும் 12 மணிக்கு முடிய, லேசாக பசி மெல்ல வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. லஞ்ச் முடித்து, சீட்டுக்கு வந்து அமர்ந்தாள் காவ்யா. மீண்டும் மெயில் செக் பண்ண, நோ நியூ மெய்ல்ஸ் என்று வர, நிம்மதியாகி, தலையை சாய்த்து, கண்ணை மூடினாள்.

ஐந்து நிமிடம் இருக்கும். போன் ரிங்கானது. திரையில் ரிஷியின் போட்டோ தெரிய, பச்சை நிறத்தை ஸ்லைடு செய்து காதில் ஒற்றினாள் போனை.
'சொல்லு டா,'
'......'
'எப்போ.? ஈவினிங் தானே.?
'......'
'சரி. ஆபீஸ் முடிஞ்சு வர்றப்போ பிக் அப் பண்ணிக்கறேன். அந்த ஓட்ட காரை விக்க சொன்னா கேட்டாதானே? கார் எப்போ திரும்ப பிக்கப்  பண்ணனும்?'
'......'
'ஓகே. டன்.  ஏய் ஒன் மினிட். ஈவினிங் அப்படியே வால்மார்ட்டுக்கும் , இந்தியன் ஸ்டோருக்கும் போக வேண்டியிருக்கும். நாளைக்குத்  தான் போகலாம்னு நெனச்சேன். பட், நீயும் ஈவினிங் வர்றதால, இன்னிக்கே போயிட்டு வந்திடலாம் . ஓகே?'
'......'

'எவ்ளவு நேரமா வெயிட் பண்றது ரிஷி? சீக்கரம் வாடா' இது காவ்யா.
'......'
'என்ன, இன்னும் 5 மினிட்ஸா? அப்போ, இங்கேயே , ஃப்ரண்ட் பார்க்கிங்ல வெயிட் பண்றேன் வா.'
மொபைல் ஆஃப் செய்துவிட்டு, ஒரு இளையராஜா சாங்கை ப்ளே செய்துவிட்டு, கண்ணை மூடினாள்.

'டொக்.. டொக்..' விழித்து பார்த்தாள். ரிஷி லேப்டாப் பேக்குடன் குளிரில் நின்றிருந்தான். காவ்யா கார் கதவை திறக்க, அவன் பேக்கை பின்னாடி வைத்துவிட்டு, பக்கத்து சீட்டில் அமர்ந்து, சீட் பெல்ட்டை  மாட்டிக்கொண்டு, 'லெட் அஸ் கோ' என்று சொல்ல, கியரை  டிரைவ் மோடில் மாற்றி, காரை நகர்த்தினாள் காவ்யா.

'இந்த டைம். கண்டிப்பா உறைஞ்சு போன நயக்ரா பார்த்தே ஆகணும்.' - ரிஷி.
' நோ வே. என்ன விளையாடறயா? ஏப்ரல்ல, கண்டிப்பா ஊருக்கு போகணும். உன் அப்பா, அம்மா கிட்ட பேசி, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கணும். அதுக்கு டிக்கெட் புக் பண்ணணும். நெறைய பர்சேஸ்   பண்ணனும்பா.. பட்ஜெட் பா. பட்ஜெட்..'

'ஹே.. ஹே.. ஊருக்கா..? நானா..? சான்சே இல்ல. கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? நாம வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சு. நெக்ஸ்ட் இயர், கண்டிப்பா போறோம். கல்யாணம் பண்றோம். ஓகே.? இப்ப.. நம்ம.. இந்த நியூ இயரை நயக்ரால.. கொண்டாடறோம்..'

'வேணாம் ரிஷி. போன வருஷமும் இதேதான் சொன்ன.. பட், இதே மாதிரி ஒரு ட்ரிப் போட்டு, காலி பண்ண. இப்பவும் அதே பண்ற. முடியாது  கண்ணா. இந்த வருஷம். கண்டிப்பா இந்தியா போறோம்.'
'சரி. அப்படின்னா.. ஒரு பெட்..' - ரிஷி.
'கண்டிப்பா'
'இப்போ.. ரொம்ப குளுரா  இருக்கில்ல.. அதனால.. பந்தையத்தை கொஞ்சம் ஹாட்டா வச்சுக்கலாம்.'

'டேய்.. கொரங்கு பையா.. உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அதெல்லாம் வேணாம். நார்மல் பந்தயம் தான்' ஒரு கையால் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால், குழந்தையை மிரட்டுவது போல, ஆட்காட்டி விரலை ஆட்டி, நாக்கை சுழற்றி காட்டினாள் காவ்யா.
டக்கென, கையை நோக்கி, முத்தம் கொடுக்க வாயை குவித்துக்கொண்டு, கிட்டே எம்பினான் ரிஷி. சுதாரித்துக்  கொண்ட காவ்யா, விரலை மடக்கிக் கொண்டு, அவன் தலையில் கொட்ட பார்க்க, கார் ஆப்போசிட் லேனில் போக, முனைந்தது. சுதாரித்து, ஸ்டேரிங்கை  திருப்பினாள் காவ்யா.

வால்மார்ட்டில்  ஜூஸ் எடுத்து கொண்டே, காவ்யா, ரிஷியிடம் கேட்டாள். 'என்ன பந்தயம் அது?'
'நா சொன்னா.. அப்பறம் பந்தயத்துக்கு ஒத்துக்கணும்.' என்றான் ரிஷி.
'ஆஹா .. அது முடியாது.. ஃப்ராட்.. உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்'
'சரி.. அப்போ நா சொல்லல.. போதுமா..?' - ரிஷி
'ஹ்ம்ம். சரி. பரவா இல்ல.. சொல்லு' என்றாள்.
காதில் ஏதோ சொல்ல.. ரிஷியின் தோளில் அடித்தாள்.

வெண்பனி காலம் முடிந்து, பச்சை நிறம் வியாபிக்க ஆரம்பித்திருந்தது.
சிகாகோக்கும் சென்னைக்குமான  இரண்டு டிக்கெட்டுகளை புக் செய்து விட்டு, கன்ஃபார்மேசன் மெயிலை  ரிஷிக்கு  ஃபார்வர்ட் செய்து விட்டு, ரோல்லிங் சேர்ரில் தலையை கொடுத்து சாய்ந்தாள்.

மூன்று வார ஷாப்பிங் எல்லாவற்றையும் பேக் செய்து முடித்து, டைம் பார்த்தாள். மணி இரவு 8ஐ காட்டியது. நாளைக்கு ஃபிளைட். இன்னும் ரிஷி வரவில்லை என நினைத்துக்கொண்டே, டின்னெரை  முடித்தாள். பெட்டில் தலை வைத்து, ஸ்மார்ட் டிவியில் ஓடிய பாடலை பார்த்துக்  கொண்டே உறங்கிப் போனாள். மெல்லிய இசை போனில் இருந்து வந்து, தூக்கத்தை கலைத்தது. பச்சை நிற பட்டனை அழுத்தி, காதில் பொருத்தினாள்.
'ஹலோ... சொல்லு ரிஷி.. எங்கடா  இருக்க..'
'எனக்கொரு இஸ்யு.. வர எப்படியும் ஒரு மணி ஆகிடும். நீ தூங்கு. சாப்டியா?'
'ஹ்ம்ம். சாப்டேன். டேய். நாளைக்கு பிளைட் வச்சுட்டு இன்னும் அங்க என்ன பண்ற? சீக்கரம் வா.. மதியம் 12 மணிக்கு நம்ம போர்டிங் பண்ணனும். ஞாபகம் வச்சுக்கோ' என்று சற்றே கடிந்து கொண்டாள்.
'சரிடி. வந்துடறேன். நீ தூங்கு. பை. குட் நைட்.' - ரிஷி
'குட் நைட்'.
5 மணிக்கு ஏதோ சப்தம் கேட்டு, விழித்து பார்த்தாள் காவ்யா. மெலிதாய் விடிந்திருக்க.. பெரும் சப்தத்துடன் மழை ஊற்றிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்க, ரிஷி இன்னும் வந்திருக்க வில்லை.
'என்ன இவன்.. இன்னும் வரல.. ' என்று யோசித்தவாறே, போனை  எடுத்து, ரிஷி நம்பருக்கு  டயல் செய்தாள்.

'யு ஹவ் ரீசிவெட் வாய்ஸ் மெயில்..' என்று ஆரம்பிக்க.. மெலிதாக கோபம் வந்தது. போனை எடுத்து பெட்டில் எரிந்து விட்டு, திரும்பவும் தூங்கிப் போனாள். ஒரு அரைமணி நேரம் கழித்து, போன் ரிங்கானது. எடுத்தாள்.
'ஹே.. காவ்யா.. இஸ்யு இன்னும் சால்வ் ஆகல. சோ, நீ எல்லாம் பேக் பண்ணி ரெடியா இரு. ஐ வில் ஜாயின் வித் யு இன் ஏர்போர்ட். என்ன ஓகே வா?' என்றான்.
'என்ன, விளையாடறயா? நாலு பேக். என்னால முடியாது. அதுவும் இல்லாம, இன்டர்நேஷனல் ஃபிளைட். 3 ஹௌர்ஸ் முன்னாடி இருக்கணும் ஏர்போர்ட்ல. நீ சொல்றத பார்த்தா .. வரமாட்ட போலவே.. ' - இது காவ்யா.
'இல்லமா பட்டு குட்டி. கண்டிப்பா வந்துடுவேன். 10 குள்ள வீட்ல இருப்பேன். அதுக்குமேல வரலனா, நீ டைரக்டா டாக்ஸி பிடுச்சு ஏர்போர்ட் வந்திடு. அங்க மீட் பண்ணிக்கலாம். நா என் காரை ஆஃபீஸ்ல விட்டுட்டு, ஏர்போர்ட் வந்திடறேன். ஓகே?' என்றான் ரிஷி.
'உனக்கு எப்பப் பாரு இதே விளையாட்டா போச்சு ரிஷி. எனக்கு பயமா இருக்கு. எதாச்சும் வராம இருந்தா, ஐ வில் நாட் கம் பேக் அகைன்  ஹியர். தெரிஞ்சுக்கோ.'
'புரிஞ்சுக்கோடி.. நா என்ன வேனும்னா பண்றேன். ப்ரோடக்ஷன் இஸ்யு. கண்டிப்பா இருந்தே ஆகணும். இல்லனா, போன்போட்டே சாவடிப்பாங்க. வந்தடறேன். இஸ்யு சால்வ் ஆகுதோ இல்லையோ, 11 குள்ள, நா ஏர்போர்ட்ல இருப்பேன். மேனேஜர் கூப்பிடறார். பை. வக்கறேன்' பதிலுக்கு காத்திராமல், கட் செய்தான்.
எழுந்து, எல்லா வேலையையும் முடித்து விட்டு ஹேண்ட் லக்கேஜ் பேக் பண்ணி முடிக்க, மணி 10 ஐ தொட்டிருந்தது. ஹாலில் உக்காந்திருக்க, சோர்வில், மீண்டும் தூங்கி போனாள்.
11 மணிவாக்கில், வேகமாக, கதவை திறந்து கொண்டு, வந்து சேர்ந்தான் ரிஷி. திடீரென, வந்ததால், பதட்டத்தில் விழித்துப்  பார்த்தாள் காவ்யா.
'எரும மாடு.. ஆடி அசஞ்சு வர்ற.. டைம் பாத்தியா? சீக்கரம் குளிச்சுட்டு வா..'
'10 மின்ஸ்.. பாரு.. உடனே வந்தடறேன்..' வேகமா ஓடிச்சென்று,
பாத்ரூம்மை சாத்திக் கொண்டான்.
டாக்ஸிக்கு போன் செய்ய, சரியாக, 20வது நிமிடத்தில், டாக்ஸி வந்து சேர்ந்தது. இரண்டு பேரும், லக்கேஜ்ஜை காரில் ஏற்றிவிட்டு, இவர்களும் காரில் ஏற, கார் ஏர்போர்ட்டை நோக்கி பறந்தது.

ஏர்போர்ட்டில் இறங்கி, டெர்மினல் 5 இன்டர்நேஷனல் சென்றனர். போர்டிங் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. ஒரு மென்மையான குரல், விமானங்களுக்கான வரவு, தடம் எண்ணை ஒரே ராகத்தில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, ஊர் செல்பவர்கள், புதிதாக வந்தவர்கள் என படு பிஸியாக இயங்கி கொண்டிருந்தது. வெளியில், மழை பெய்ய தொடங்க.. பல நாட்டு கொடிகள், மழையில் நனைந்து, நனைந்த ஆண் மயில் போல வாடி இருந்தது.
இதமான குளிர், ரிஷியின் அருகாமை, பல வருடங்கள் கழித்து ஊர் செல்லும் ஆர்வம் என மகிழ்ச்சியில் காவ்யா இருந்தாள்.
இவர்களுக்கான அனுமதி ஒப்பந்தத்தை படிக்க ஆரம்பித்து, ஏதோ காரணங்களுக்காக, 2 மணிநேரம் தாமதமாக போவதாக அந்த பெண் அறிவித்தாள். அதைக் கேட்டு, ரிஷி, அவனது கைகளை பிடித்து அமர்ந்திருந்த காவ்யாவை பார்க்க, காவ்யா ரிஷியை பார்த்தாள்.
'சரி. கொஞ்ச நேரம் தூங்கறேன். ரொம்ப டயர்டா இருக்கு. என்னை எழுப்பு. சரியா?' என்றான் ரிஷி.
'ஹ்ம்ம்' என்று சொல்ல, காவ்யாவின் தோளில் சாய்ந்து கண்ணை மூட ஆரம்பித்தான். அவனை பார்த்து, சிறிதாய் புன்னகைத்து விட்டு, இவளும், அவன் தலையின் பக்கம் சாய்த்து கண்ணை மூடினாள்.

'மேடம். மேடம்.. ' ஒரு பெண் காவ்யாவை எழுப்ப, கண்விழித்து பார்க்க, தலை வலிக்க ஆரம்பித்தது. என்ன என்பது போல அந்த பெண்ணை ஏறிட்டாள்.
'ஆர் யு மிஸ்.காவ்யா?' என்றாள் அந்த ஆங்கில பெண்.
'எஸ்' என்று, எழுந்தாள்.
'திஸ் ஸ் பைனல் கால் டு போர்டு தி ஃபிளைட் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ். ப்ளீஸ் ப்ரோசீட் வித் போர்டிங் மேம்' என்று கூறி விட்டு, சென்றாள்.

எழுந்துப் பார்க்க.. அவள் மட்டும் தனியாக இருந்தாள்,ரிஷியை காணவில்லை. அவனது பேக்கும் காணவில்லை.  திருதிருவென விழிக்க, ஏர்போர்ட் டெர்மினலை சுற்றிலும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யார் யாரோ தென்பட, ரிஷியை காணவில்லை. போர்டிங் செய்ய இன்னும் கடைசி சில நிமிடங்கள் இருக்க, போனை எடுத்து ரிஷி எண்ணுக்கு டயல் செய்தாள்.  சில நொடி டயல் போனபின்பு, "தி நம்பர் யு ஹேவ் டயல்டு ஹஸ் பீன் டிஸ்கெனக்டேட்  இஸ் நோ லாங்கர் இன் சர்வீஸ்" என்றது.
காவ்யாவுக்கு முகம் வேர்க்க, 'டேய் எங்க இருக்க;' என்று ஒரு மெசேஜ் அனுப்பினாள். உடனடியாக ஒரு பீப் சப்தத்தை போன் கொடுக்க, எடுத்து பார்த்தாள். திரையில், 'தி  ஏடி அண்ட் டி ஸப்ஸக்றைப்பர் யு  ஆர் டிரெய்யீங் டு ரீச் இஸ் நோ லாங்கர் இன் சர்வீஸ்' என்றது. வெளியில் பெய்யும் மழையை விட இவளுக்கு அதிகமாக வியர்க்க ஆரம்பித்தது.
'இவன் ஏன் இப்படி என் கூட விளையாடுகிறான் என்று திட்டிக் கொண்டே, வெளியில் ஓடினாள்.
மழைத்துளி இவள் மீது தெறிக்க, தொப்பலாக நனைக்க ஆரம்பித்தது.

இரண்டு மூன்று டாக்ஸி இவளை வேகமாக கடந்து செல்ல, ஒரு மஞ்சள் நிற டாக்ஸி இவளின் முன்னாடி சறுக்கிட்டு நின்றது.
'ஹலோ மேம்.. ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு?' என்றான் அந்த வெள்ளைக்காரன்.
அப்போதுதான் அவனும் இவளை கவனிக்க, இவளும் இவனை எங்கோ பார்த்தது போல தோன்ற, அவனே ஆரம்பித்தான். 'மேம். எனி ப்ராப்லெம்? ஃபிளைட் எதாச்சும் லேட்டா?' என ஆங்கிலத்தில் கேட்க.
இவளுக்கு பேச்சு வராமல், நா குழறியது. 'இல்லை. எங்கூட வந்தவர காணோம். அதான் எங்கனு தேடிட்டு இருக்கேன் என்று தன் இயலாமையில், கண்ணீரோடு கூற, 'நோ மேம். யு ஆர் மிஷ்டகேன் மிஸ்டேக்கன். நீங்க மட்டும் தான் என்கூட வந்தீர்கள். வேற யாரும் வரவில்லை.' என்றான்.
இதை கேட்க கேட்க, காவ்யாவுக்கு, பூமியே நழுவுவது போல தோன்ற, அந்த மழை நேரத்தில், கண்கள் இருட்டி கொண்டு வர, மயங்கிச்  சரிந்தாள்.


*******************************


'பீப் பீப்' என ஒலி எழுப்பிக் கொண்டு ஒரு கருவி இருக்க, இன்னொரு திரையில் பலவிதமான கோடுகளும், பங்குசந்தை நிலவரம் போல ஓடிக் கொண்டிருந்தது. காவ்யா கண்களை மூடி உறங்கி கொண்டிருந்தாள்.   ராகவ் தன் தலையில் கைவைத்து முடியை தூக்கி உட்கார்ந்திருந்தான்.
'ஆர் யு மிஸ்டர் ராகவ்?' - ஒரு வெள்ளைக்கார நர்ஸ் பச்சை நிறஉடையில் முகத்திற்கு இட்டிருந்த வெள்ளை மாஸ்க்கை  கழற்றியபடி கேட்டாள்.
'எஸ் ஐ  எம்' என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.
டாக்டர் ராபர்ட் வாண்ட்ஸ் டு டாக் வித் யு ரெகார்டிங் காவ்யா. ப்ளீஸ் கோ டு கன்சல்ட்டிங்  ரூம் இன் செகண்ட் ப்ளோர்' என்று கூறி விட்டு, காவ்யாவின் அருகில் இருந்த மானிட்டரை பார்த்து, ஏதோ நோட் செய்ய ஆரம்பித்தாள்.

ராகவ் டாக்டரைப் பார்த்துப் பேசும்முன், ராகவ் பற்றிய ஒரு அறிமுகம். அமெரிக்காவில் பிறந்தது, வளர்ந்தது இந்தியாவில்.  எம்.எஸ் படிக்க, அமெரிக்கா வந்தவன், இங்கேயே  வேலையிலும் சேர்ந்தான். காவ்யா வேலை செய்யும் அதே எம்என்சியில் டெலிவரி மேனேஜர் ஆக ரெண்டு மாதம் முன்பு சேர்ந்து பணிபுரிந்து வருகிறான். ராகவ் வயசு இருபத்தி எட்டை தாண்ட எத்தனித்திருந்தது.
ராகவ் செகண்ட் ஃப்ளோரை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து சேர, டாக்டர் ராபர்ட், வெள்ளை நிறத்தில் சர்ட்டும், சந்தன நிற பேண்ட்டும் அணிந்திருந்தான். வயது ஒரு முப்பத்தில் இருந்து, முப்பத்தி நான்குக்குள் இருக்கும்.

ராபர்ட், ராகவ் அறிமுகம் முடிந்து, காவ்யாவை பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். காவ்யாவை பற்றி நிறைய விவரங்கள் ராகவ் தெரிந்திருந்த காரணத்தால், ராகவ் தெளிவான ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

காவ்யா, பொறந்தது, வளர்ந்தது எல்லாமே இந்தியா, கோயம்புத்தூர்ல தான். காவ்யாவோட ஃபேமிலி ரொம்ப பெரிய குடும்பம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, மாமா பொண்ணு, மாமா பையன்னு ஒரு பெரிய குடும்பம். குடும்பத்துல எல்லோருக்கும் சின்ன, செல்ல பொண்ணு வேற.. அவளுக்கு அவ மாமா பையன் மேல அவ்ளோ பிரியம். அவனுக்கும் தான். ரொம்ப நல்லா படிப்பா.  அவ மாமா பொண்ணும் பையனும் ட்வின்ஸ் யாமினி, யாதவ். ரெண்டு பேருமே காவ்யாவவிட ரெண்டு வயசு பெரியவங்க. யாமினி அவ்வளவா படிக்க மாட்டா. ஆனா, காவ்யாவும், யாதவும் ரொம்ப நல்லா படிப்பாங்க.
யாதவுக்கு  ஐஐடீ மும்பைல பிடெக்ல இடம் கெடச்சுது. அதே ஐஐடீல தான் நானும் படிச்சேன். நா இங்க பொறந்தாலும், என் பெற்றோர்கள்  ப்ரெண்ட்ஸ்  எல்லாரும் ஈரோடு பக்கம். அவங்க இங்க செட்டில் ஆகிட்டாங்க. பட், என்னை இந்தியாவுல மும்பைல இருக்கற சித்தப்பா வீட்ல இருந்து தான் படிக்க வச்சாங்க.  யாதவ் ஐஐடில படிக்கரதால, காவ்யாவும் கஷ்டப்பட்டு, ஐஐடில ஜாயீன்  பண்ணிட்டா. யாதவும் நானும் நல்ல பிரெண்ட்ஸ். அதனால எனக்கு அவங்க ஃபாமிலி பத்தி தெரியும்.  நாங்க ரெண்டு பேரும் டிகிரி முடிச்சு, மேல படிக்க இருந்த சமயம். நவம்பர் 2008ல அவங்க ஃபாமிலில எல்லோரும் மும்பை வந்திருந்தாங்க. ஸ்டடி லீவின்றதால, எல்லோரும் கெளம்பி புனேயில் இருக்கற சிதேஷ்வர் கோவிலுக்கு போக முடிவு செய்திருந்தோம். நவம்பர் இருபத்தி ஆறு நைட் பத்து மணிக்கு ட்ரைன் எங்களுக்கு. நான் தான் அவர்களை ரயில்வே ஸ்டேஷனில் ட்ராப் செய்தேன். நான் அவங்கள விட்டுவிட்டு வீடு வந்து சேர்றதுக்குள்ள, சிவாஜி சத்ரபதி ஸ்டேஷன்ல புகுந்த தீவரவாதிங்க ஐம்பத்தி எட்டு பேரை சுட்டே கொன்னிருக்காங்க. அதுல மொத்த குடும்பமும் இறந்துட்டாங்க. இந்த இன்சிடென்ட்டுக்கு அப்புறமா நா இந்தியால இருக்க என்னோட     பேரெண்ட்ஸ் விடல. நான் இங்க வந்துட்டேன். இறந்தவங்க லிஸ்ட்ல காவ்யா உட்பட எல்லோருடைய பேரும் இருந்தது. ஆனா கடந்த ரெண்டு மாசம் முன்னாடி, காவ்யா வேல செய்யற அதே ஆஃபீஸ்ல, அவ டீம்ல சேர்ந்தேன். அவளுக்கு என்னை சுத்தமாக அடையாளம் தெரியல.  அவ்வளவு அழகா சிரித்து சிரித்து பேச கூடிய காவ்யா, அப்படி ஒரு பொண்ணா என்னால பார்க்க கூட முடியல.  டீம்ல இருக்கற மத்தவங்க கிட்ட விசாரிச்சப்போ தான் தெரிஞ்சுது. அவ மட்டும் தனியா ஒரு
அபார்ட்மென்ட்டில  இருக்கறதாவும், யார் கூடவும் பேச கூட மாட்டா  என்றும் தெரிந்தது. அவ கூட இந்தியாவுல வேலை செஞ்ச  ஃப்ரென்ட்  சொன்னத வச்சு பாக்கறப்போ, அவங்க குடும்பத்துல யாருமே உயிரோட இல்லனும், அவ தனியா சென்னைல இருந்ததாவும் சொன்னாங்க. எப்பவும் வொர்க் வொர்க்குன்னு  ஆஃபீஸ்லையே இருப்பதா சொன்னாங்க. அதனாலத்தான் சீக்கரமாவே ஆன்சைட்  கெடச்சு இங்க வந்திருக்காங்க. எப்படி காவ்யா உயிரோட இருக்காங்கன்னு கூட தெரியாது. நேத்து என்னோட ஆஃபீஸ்ல விஷயமா வெளியூர் போயிட்டு, வந்தப்போ ஏர்போர்ட்ல காவ்யா மட்டும் தனியா நடந்துட்டு, பேசிட்டு லக்கேஜ் எடுத்துட்டு போனாங்க. நான் பின்னாடியே போய், அவங்க கிட்ட பேசலான்னு நெனைக்கரப்போ, அவங்க தனக்கு தானே பேசிக்கிட்டு இருந்தாங்க. ரிஷி ரிஷின்னு  பேசிட்டு இருந்தாங்க. நான் அவங்க முன்னாடி போய் நின்னு காவ்யா, காவ்யான்னு கூப்பிட்டு பார்த்தேன். எந்த விதமான ரீயக்ஷணும்  தரல, அப்படியே மயங்கி விழுந்துட்டாங்க.  ஏதோ ப்ரொப்லெம்ன்னு  நெனச்சு, எமெர்ஜென்சிக்கு போன் செய்யலான்னு போன் எடுத்தா.
 சார்ஜ் இல்ல. சரி பூத்ல போன் பண்ண போனப்போ, ஏர் ஹோஸ்டஸ் வந்து அவங்கல எழுப்ப, எழுந்துட்டாங்க. எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்க, முன்ன பின்ன பார்த்துக்கொண்டே, போன் எடுத்து போன் செய்துகிட்டே வெளில ஓடினாங்க. நானும் பின்னாடியே வர, டாக்ஸி டிரைவர் கிட்ட பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன். எனக்கு பயங்கர ஷாக்கிங்கா இருந்துச்சு. அப்பறம் தான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம் டாக்டர். குழம்பிய நிலையில் கேட்க ஆரம்பித்த டாக்டர், ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டே இருந்த ராபர்ட்டுக்கு இப்போது முகத்தில் ஒரு தெளிவு தென் பட்டது.

மிஸ்டர் ராகவ், நீங்க சொல்றத, அவங்க கூட வேல செய்யறவங்க சொல்றத வச்சு பார்க்கின்றபோது, காவ்யா இஸ் அஃபக்டெட் பை அன் டிசார்டர். இது இங்க இருக்கறவங்க பல பேர் இதால பாதிக்கப்பட்டு இருக்காங்க. இத ஸ்கிசோஃப்ரினியா(Schizophrenia ) ன்னு  சொல்லுவாங்க. அதாவது தமிழ் அர்த்தம்னா, மன பிளவுன்னு  சொல்லலாம். கொஞ்சம் புரியறமாதிரி உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்றேன். இந்த வகையான டிசார்டர்ஸ் எல்லாமே, ஒரு இமேஜினரி உலகம் அதாவது, கற்பனையான உலகத்தில் இருப்பார்கள். பேசிக்கா ஹுமனுக்கு இருக்கற ஐந்து புலங்களில் அதாவது, பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி. இதுல ஏதாவதுல பாதிப்பு வரலாம். ஆனால், பொதுவாக இது ஒலி கேட்பது போன்ற மனப்பிரமைகள், திரிபுணர்வுப் பிணி (paranoid), பயங்கரமான மருட்சி (delusion) அல்லது ஒழுங்கின்மையான பேச்சு மற்றும் சிந்தனை இவற்றுடன் குறிப்பிடும்படியான சமூக மற்றும் பணி நிமித்தமான செயல்திறன் திரிதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது. இந்த பிரச்சனை  பற்றி டெஸ்ட் எல்லாம் எதுவும் கெடயாது. நோயாளியே தமது அனுபவங்களைக் கூறுவதையும், மற்றவர்கள் அவரிடம் காணப்பட்ட நடத்தையாகக் குறிப்பிடுவதையும் அடிப்படையாகக் கொள்கிறது. இது கொஞ்சம் காம்ப்ளிகேட்ட் கேஸ். இந்த விதமான நோய்க்கு ட்ரீட்மென்ட் கொஞ்சம் கம்மி. இதுல நெறைய சப்-டைப் இருக்கு. அதுல ஒரு பிரிவுதான் இது.  ரிஷின்ற ஒரு கேரக்டர் அவங்க லைஃப்ல இருந்திருக்காது. முழுக்க முழுக்க கற்பனையில் உருவானதுதான். தனிமை, விரக்தி, அனாதை ஆனா உணர்வு, எல்லாம் சேர்ந்து, அவங்கள, அவங்களே தேர்த்த முயற்சி செய்ததன் பலன் தான் ரிஷி. அவங்களா ஒரு கற்பனை உருவத்தை உருவாக்கி அதனோடு வாழ்ந்திருக்கிறார்.  நேற்று வரைக்கும் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு ப்ராப்லெம் இருக்கறதே தெரியாது. ஆனா, இன்னிக்கு அல்லது அவங்களுக்கு எப்போ ஞாபகம் வருதோ, அன்னிக்கு ரெண்டு விஷயம் நடக்கலாம்.

அவங்களுக்கு ரிஷின்ற ஒரு கேரக்டர் மட்டுமே எஞ்சி இருக்கும். அல்லது
அவங்களுக்கு மற்ற எல்லா விஷயமும் இன்க்ளுடிங் அவங்க பழைய சம்பவங்கள் ஞாபகம் வரலாம்.

இதுல எது நடந்தாலும் அவங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ரிஷி இல்லாத ஒரு உலகத்தை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. ஏன் தற்கொலைக்கு கூட முயற்சி எடுக்கலாம்.
சோ, நீங்க ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட். சொல்லி விட்டு, ராபர்ட் கிளம்பினார்.

ராகவ் மெதுவாக எழுந்து, எமெர்ஜென்சி வார்டை நோக்கி நடந்தான் ஒரு தீர்மானத்தோடு.  காவ்யாவின் அருகில், கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருக்க, அவளின் பின்னாடி இருந்த திரையில் கோடு மேலும் கீழுமாய் நகர்ந்து கொண்டிருந்தது.


*******************முற்றும்********************

,.